இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவே பெருமையாக நினைக்கும் புகழ்மிக்க நபர். எந்த நிகழ்ச்சியிலும் அமைதி, அடக்கம் ஆகியவற்றை கடைபிடித்து, பெரிய பிரபலமாக இருந்தாலும், மக்களுடன் சாதாரணமாக பழகும் தன்மை கொண்டவர்.
சமீபத்தில், 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு தனது மனைவி சாய்ராவுடன் விவாகரத்து செய்யும் முடிவை ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவரை குறித்த பல விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
விவாகரத்திற்கு பிறகு, ரஹ்மானைப் பற்றிய பல சர்ச்சைகள் மற்றும் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்துள்ளன. இதை பார்த்து வருத்தமடைந்த அவரது மகன் ஏஆர் அமீன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனல் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
“என் தந்தை ஒரு சாதனையாளர். அவர் இசைத்துறையில் அளித்த பங்களிப்பு மட்டுமல்ல, பல ஆண்டுகளாக அவர் கடைப்பிடித்த மதிப்புகள், மரியாதை, மற்றும் அன்பு ஆகியவற்றிற்காகவும் அவரைப் பெருமையாக பார்க்கிறேன். அவரைப் பற்றிய ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவதை பார்க்க மனமுடைந்து போகிறேன். தயவுசெய்து இத்தகைய தவறான தகவல்களை பகிருவதை நிறுத்துங்கள்,” என்று அமீன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு, ஏ.ஆர். ரஹ்மானின் குடும்பத்தினர் இச்சூழ்நிலையில் எதிர்கொள்ளும் வேதனையை வெளிப்படுத்தி உள்ளது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.