இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவே பெருமையாக நினைக்கும் புகழ்மிக்க நபர். எந்த நிகழ்ச்சியிலும் அமைதி, அடக்கம் ஆகியவற்றை கடைபிடித்து, பெரிய பிரபலமாக இருந்தாலும், மக்களுடன் சாதாரணமாக பழகும் தன்மை கொண்டவர்.
சமீபத்தில், 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு தனது மனைவி சாய்ராவுடன் விவாகரத்து செய்யும் முடிவை ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவரை குறித்த பல விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
விவாகரத்திற்கு பிறகு, ரஹ்மானைப் பற்றிய பல சர்ச்சைகள் மற்றும் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்துள்ளன. இதை பார்த்து வருத்தமடைந்த அவரது மகன் ஏஆர் அமீன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனல் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
“என் தந்தை ஒரு சாதனையாளர். அவர் இசைத்துறையில் அளித்த பங்களிப்பு மட்டுமல்ல, பல ஆண்டுகளாக அவர் கடைப்பிடித்த மதிப்புகள், மரியாதை, மற்றும் அன்பு ஆகியவற்றிற்காகவும் அவரைப் பெருமையாக பார்க்கிறேன். அவரைப் பற்றிய ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவதை பார்க்க மனமுடைந்து போகிறேன். தயவுசெய்து இத்தகைய தவறான தகவல்களை பகிருவதை நிறுத்துங்கள்,” என்று அமீன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு, ஏ.ஆர். ரஹ்மானின் குடும்பத்தினர் இச்சூழ்நிலையில் எதிர்கொள்ளும் வேதனையை வெளிப்படுத்தி உள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.