மாறி மாறி குற்றஞ்சாட்டும் அர்னவ் – திவ்யா விவகாரத்தில் புதிய திருப்பம்… வாக்குவாத வீடியோ வெளியீடு..!

சின்னத்திரை நடிகர்களான அர்ணவ் – திவ்யா தம்பதிக்கு இடையே நிலவி வரும் குடும்பப் பிரச்சினையில், பரஸ்பரம் இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி வரும் நிலையில், இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாத வீடியோவை அர்னவ் வெளியிட்டுள்ளார்.

‘பல்லக்கி’ எனும் கன்னட படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் பெங்களூருவைச் சேர்ந்த நடிகை திவ்யா ஸ்ரீதர். இதனையடுத்து, முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட ‘கேளடி கண்மணி’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதனிடையே, புதுக்கோட்டையைச் சேர்ந்த நைனா முகமத் என்பவர் அர்ணவ் என்ற பெயரில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.

‘கேளடி கண்மணி’ சீரியலை தொடர்ந்து நடிகை திவ்யா மற்றும் அர்ணவ் பிரபலமானார்கள். பின்னர் இருவரும் இனைந்து நடித்து வந்துள்ளனர். மகராசி, செவ்வந்தி சீரியலிலும் திவ்யா நடித்துள்ளார். அர்ணவ் தற்போது செல்லம்மா சீரியலில் நடித்து வருகிறார்.

இருவரும் நட்பாக பழகி வந்தநிலையில் கேளடி கண்மணி சீரியலில் நடித்த போது காதலிக்க தொடங்கியதாக தெரிகிறது. 2017 ஆம் ஆண்டு முதல் காதலித்த இவர்கள் 5 ஆண்டுகளுக்கு பின்னர் திருமண வாழ்க்கையிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சென்னை வடக்கு மாவட்டம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இந்தாண்டு ஜூன் மாதம் திவ்யா இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறி, இருவரும் வீட்டிற்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்கள் பல்வேறு கேள்வி எழுப்பினர். இதனிடையே நடிகை திவ்யா கர்ப்பமானார். இதனிடையே, கணவர் அர்ணவ் தன்னை தாக்கியதாக கூறி நடிகை திவ்யா வீடியோ வெளியிட்டார்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அர்ணவ் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் தனது மனைவி திவ்யா, அவரது நண்பருடன் இணைந்து மூன்று மாத கருவை கலைத்துள்ளதாக நாடகம் நடத்துவதாக கூறியுள்ளார். எனவே இது சம்பந்தமாக மனைவி திவ்யா, அவரது நண்பர் ஈஸ்வர், இதற்கு துணை போன மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் திவ்யாவை தான் தாக்கியதாகக் கூறியிருப்பது முற்றிலும் பொய் என்றும், வீட்டில் தான் இல்லை என்பதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் உள்ளது எனவும், திவ்யா கருவைக் கலைப்பதற்காக நாடகம் ஆடுகிறார் எனவும், தவறான நண்பர்களின் வழிகாட்டுதலால் இவ்வாறு செய்து வருவதாக அர்ணவ் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய திவ்யா அர்ணவ் தன்னிடம் பாசமாகவே இல்லை. தான் அர்ணவ் உடன் வாழ ஆசைப்படுவதாகவும், தான் தன்னோட மதத்தை விட்டு விட்டு அவரோட மதத்திற்கு மாறியுள்ளதாகவும், ஆனால் தன்னை பொருட்படுத்துவதே இல்லை. தனக்கு என்ன வேண்டும் என்று கூட கேட்பதில்லை. ஒரே வீட்டில் தனித்தனியாக இருந்து வருவதாகவும், அவராகவே ஆர்டர் செய்து சாப்பிடுவார் என்று செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தான் கர்ப்பமான காரணத்தால், எந்த புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் பதிவிடவில்லை எனவும், படிப்படியாக தன் மீதான பாசம் குறையத் தொடங்கியதாகவும், சீரியலில் நடிக்கும் வேறு பெண்ணுடன் நெருங்கி பழக தொடங்கியதால், தான் திருமணம் நடந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

கர்ப்பமாக இருக்கும் காலத்திலும் தான் சீரியல் சூட்டிங் சென்றதாகவும், தன்னை அடித்து தள்ளி விட்டதாகவும், வேறு ஒரு பொண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னை அசிங்கப்படுத்துகிறார் என்று கண்ணீர் விட்டு கதறினார் திவ்யா.

மேலும் அவர் தன்னை சோசியல் மீடியாவில் இருந்து பிளாக் செய்து விட்டதாகவும், கணவருடன் தொடர்பில் இருக்கும் அந்த பெண் தனது முன்னிலையிலே தன் கணவருக்கு முத்தம் தருவதாகவும், ஐ லவ் யூ, ஐ மிஸ் யூ என்று வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புவதாகவும், தான் சோசியல் மீடியாவில் போட்டோக்களை போட்டதில் இருந்தே தனக்கு இந்த மாதிரியான கொடுமைகள் ஆரம்பமாகிவிட்டது என தெரிவித்துள்ளார்.

இதனிடையே திவ்யா அளித்த புகார் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. நடிகர் அர்ணவிடம் காவல் நிலையத்தில் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் தனது மனைவிக்கு மன ரீதியான பாதிப்பு இருந்ததாக கூறி, அர்ணவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அர்னவை துரோகக்காரா, நீ எனக்கு துரோகம் செய்து விட்டாய், நீ ஆம்பளையா என திவ்யா கேட்கிறார்.

அதற்கு அர்ணாவ் நீ தான் எனக்கு துரோகம் செய்து இருக்க புருஷன் குழந்தைகளை என்னிடம் மறைத்து என்னை திருமணம் செய்து இருக்க என்று பேசுகிறார். ஆனால் அப்போதும் அர்ணாவ் முகம் அதில் தெரியவில்லை. இதனிடையே, ஈஸ்வர் என்பவருடனும் போனில் குடும்பத் தகராறை கூறி வருகிறார் திவ்யா. அர்னவ் ஷேர் செய்த இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Poorni

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

4 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

5 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

6 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

6 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

8 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

10 hours ago

This website uses cookies.