தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது டாப் நடிகராக வலம் வருகிறார், அஜித், விஜய்க்கு அடுத்தபடி என்ற இடத்திற்கு சிவகார்த்திகேயன் முன்னேறியுள்ளார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் வெளியாகி மோசமான தோல்வியை சந்தித்தது. இதை தவிர இவர், மாவீரன், அயலான் என அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு தனியார் டிவி டான்ஸ் நிகழ்ச்சியில் விருந்திரனாக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பாபா பாஸ்கர், நடிகை சினேகா மற்றும் சங்கீதா உள்ளனர்.
அந்த மேடையில் நடிகை சங்கீதா சிவகார்த்திகேயனுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார். அதாவது, அடுத்து ஆடப்போகும் 5 ஜோடிகளில் உங்களுக்கு யார் நன்றாக தோன்றுகிறதோ அவர்களை அடுத்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
அதற்கு சம்மதம் தெரிவித்த சிவகார்த்திகேயன், படம் முழுக்க இருக்கும் கதாபாத்திரத்தை கொடுப்பேன் என ஒப்புக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சிவகார்திகேயன், தொலைக்காட்சியில் இருந்து வருபவர்களக்கு நடிப்பதை நான் பெருமையாக நினைப்பதை விட திமிராக நினைக்கிறேன்.
நான் வாய்ப்பு தேடிய போது, டிவியில் இருந்து வந்தவன் என்பதால் பலர் ஒதுக்கினார்கள். ஆனால் தொலைக்காட்சியில் இருந்து வருபவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை நாம் திமிராக நினைக்கிறேன் என பேசினார்.
நடிகை சங்கீதா மற்றும் சினேகா முன்பு அவர் இப்படி பேசியது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. மேலும் பொதுவெளியில் இப்படி திமிராக பேசலாமா என நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.