த்ரிஷா கூட அதை பண்ணியே ஆகணும் அடம் பிடித்த அரசியல்வாதி.. ஷூட்டிங்கில் நடந்ததை புட்டு புட்டு வைத்த இயக்குனர்..!

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

த்ரிஷா நடித்த ஒருசில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவருக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.

ஏற்கனவே, பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா. மேலும், நடிகை திரிஷா இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி வளர்ந்து வரும் வேகத்தில் அதற்கு ஈடாக பல்வேறு பிரச்சனைகளையும் திரிஷா சந்தித்து வருகிறார்.

சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு கொடுத்த பேட்டி பெரும் சர்ச்சையானது. அதில், அவர் கூறியதாவது, “கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம். அவர் திரிஷா தான் வேண்டும் என அடம்பிடித்ததார்.

அதற்கு 25 லட்சம் தரப்பட்டதாகவும். எடப்பாடி சொல்லி தான் திரிஷாவை கருணாஸ் ஏற்பாடு செய்தார்” என ஏ.வி. ராஜு தெரிவித்தார். எந்த ஆதாரமும் இன்றி திரைத்துறையினர் மீது இவ்வாறு அவதூறு பரப்பும் ஏ.வி. ராஜுவின் இந்த சர்ச்சை பேச்சுக்கு இயக்குனர் சேரன், பாடகி சின்மயி, நடிகை காயத்ரி ரகுராம், விஷால் ஆகியோர் ஏ.வி. ராஜுவுக்குகடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து ட்விட் செய்த நடிகை திரிஷா நிச்சயம் சம்மந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனி சொல்ல வேண்டியது அனைத்தையும் என் legal department-யிடம் இருந்து வரும்” என திரிஷா காட்டமாக கூறி இருந்தார்.

இந்நிலையில், தி ரோடு படத்தின் இயக்குனர் அருண் வசீகரன் திரிஷா விவகாரம் குறித்து பேசியுள்ளார். அதில், அவர் நாங்கள் மதுரைக்கு ஷூட்டிங் காக சென்று இருந்தோம். அந்த சமயத்தில், கவுன்சிலர் ஒருவர் த்ரிஷாவுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நீண்ட நேரம் காத்திருந்தார். அதற்கு திரிஷா கண்டுகொள்ளாமல் இருந்தார். உடனே நான் மேடம் அவர் வெயிட் செய்கிறார் என்று கூறினேன்.

அதற்கு த்ரிஷா அரசியல்வாதியோடு போட்டோ எடுத்தால், அவர்கள் மிஸ் யூஸ் செய்து விடுவார்கள் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். இப்படிப்பட்டவரா அந்த அதிமுக முன்னாள் நிர்வாகி சொன்னது போல் நடந்திருப்பார். அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என த்ரிஷாவுக்கு ஆதரவாக இயக்குனர் அருண் வசீகரன் பேசியுள்ளார்.

Poorni

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

7 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

8 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

9 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

10 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

12 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

13 hours ago

This website uses cookies.