தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து 2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் பிரபலமான ஹீரோவாக பார்க்கப்பட்டு வந்தவர் தான் அரவிந்த்சாமி. பெண்களின் பேவரைட் ஹீரோவாக ஹேண்ட்ஸ்ம் லுக்கில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அரவிந்த்சாமி இன்றும் பலரின் பேவரைட் ஹீரோ தான்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் அரவிந்த்சாமி கிட்டத்தட்ட 57 வயதாகியும் கூட தற்போது வரை ஹேண்ட்ஸம் ஹீரோவாக இருந்து கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக கிடைக்கும் பட வாய்ப்புகளில் முக்கியமான கதாபாத்திரங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு நடிகர் அரவிந்த்சாமி குறித்து மிகவும் மோசமான கருத்தை பதிவு செய்திருக்கிறார் . அந்த பேட்டில் அவர் கூறியிருப்பதாவது மனோபாலா சார் அரவிந்த்சாமி வைத்து சதுரங்க வேட்டை 2 படத்தை தயாரித்திருந்தார் .
அந்த படத்தை வெளியில் கொண்டுவர நிறைய முயற்சிகள் செய்தார்கள். கடைசியில் அந்த படம் வெளிவராமல் அவர் இறந்தும் போய்விட்டார். அதில் ஹீரோவாக நடித்த அரவிந்த்சாமிக்கு கொஞ்சம் சம்பளம் பாக்கி இருக்கு. அந்த சம்பள பாக்கியை கொடுத்தால் தான் டப்பிங் வருவேன் என கரராக சொல்லிவிட்டார் .
கொஞ்சமாவது நடிகர்கள் இறங்கி வரணும். மனிதாபிமானம் என்பது அரவிந்த்சாமிக்கு சுத்தமாகவே இல்லை. அவருக்கு மட்டும் இல்லை பல நடிகர்களுக்கு மனசாட்சியே இல்லை. அப்படிப்பட்ட நடிகர்களை தளபதி, உலகநாயகன், சின்ன தளபதி, புரட்சி தளபதி, திடீர் தளபதி, அடுத்த நாளைக்கு வரும் கவின் என்று புதுசு புதுசாக கிளம்பி வருகிறார்கள் .
எல்லாம் இப்படி வந்து கேவலப்படுத்துறாங்க . ஆனால் கொஞ்சம் கூட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் நிலை அவர்கள் நினைத்து பார்ப்பதே கிடையாது என பாலாஜி பிரபு அந்த பேட்டியில் காட்டமாக பேசியிருக்கிறார். இந்த நிலையில் அரவிந்த்சாமி சம்பள பாக்கி கொடுக்க வேண்டும் என கரராக கூறியதால் தான் சதுரங்க வேட்டை படம் பாதியிலே நிறுத்தப்பட்டதா? என்ற ஒரு கேள்வி தற்போது அனைவரும் மனதிலும் எழுந்து இருக்கிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.