தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து 2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் பிரபலமான ஹீரோவாக பார்க்கப்பட்டு வந்தவர் தான் அரவிந்த்சாமி. பெண்களின் பேவரைட் ஹீரோவாக ஹேண்ட்ஸ்ம் லுக்கில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அரவிந்த்சாமி இன்றும் பலரின் பேவரைட் ஹீரோ தான்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் அரவிந்த்சாமி கிட்டத்தட்ட 57 வயதாகியும் கூட தற்போது வரை ஹேண்ட்ஸம் ஹீரோவாக இருந்து கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக கிடைக்கும் பட வாய்ப்புகளில் முக்கியமான கதாபாத்திரங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு நடிகர் அரவிந்த்சாமி குறித்து மிகவும் மோசமான கருத்தை பதிவு செய்திருக்கிறார் . அந்த பேட்டில் அவர் கூறியிருப்பதாவது மனோபாலா சார் அரவிந்த்சாமி வைத்து சதுரங்க வேட்டை 2 படத்தை தயாரித்திருந்தார் .
அந்த படத்தை வெளியில் கொண்டுவர நிறைய முயற்சிகள் செய்தார்கள். கடைசியில் அந்த படம் வெளிவராமல் அவர் இறந்தும் போய்விட்டார். அதில் ஹீரோவாக நடித்த அரவிந்த்சாமிக்கு கொஞ்சம் சம்பளம் பாக்கி இருக்கு. அந்த சம்பள பாக்கியை கொடுத்தால் தான் டப்பிங் வருவேன் என கரராக சொல்லிவிட்டார் .
கொஞ்சமாவது நடிகர்கள் இறங்கி வரணும். மனிதாபிமானம் என்பது அரவிந்த்சாமிக்கு சுத்தமாகவே இல்லை. அவருக்கு மட்டும் இல்லை பல நடிகர்களுக்கு மனசாட்சியே இல்லை. அப்படிப்பட்ட நடிகர்களை தளபதி, உலகநாயகன், சின்ன தளபதி, புரட்சி தளபதி, திடீர் தளபதி, அடுத்த நாளைக்கு வரும் கவின் என்று புதுசு புதுசாக கிளம்பி வருகிறார்கள் .
எல்லாம் இப்படி வந்து கேவலப்படுத்துறாங்க . ஆனால் கொஞ்சம் கூட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் நிலை அவர்கள் நினைத்து பார்ப்பதே கிடையாது என பாலாஜி பிரபு அந்த பேட்டியில் காட்டமாக பேசியிருக்கிறார். இந்த நிலையில் அரவிந்த்சாமி சம்பள பாக்கி கொடுக்க வேண்டும் என கரராக கூறியதால் தான் சதுரங்க வேட்டை படம் பாதியிலே நிறுத்தப்பட்டதா? என்ற ஒரு கேள்வி தற்போது அனைவரும் மனதிலும் எழுந்து இருக்கிறது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.