90ஸ் களில் தமிழ் சினிமாவில் பெண்கள் மத்தியில் கனவு கண்ணனாக இருந்தவர் நடிகர் அரவிந்த்சாமி. 1991ம் ஆண்டு வெளிவந்த தளபதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். அறிமுகமான படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இயக்குனர் மணிரத்தினத்திடமும் நல்ல அபிமானத்தை பெற்றதால், அடுத்ததாக இவரை கதாநாயகனாக வைத்து மணிரத்தினம் இயக்கிய திரைப்படம் ரோஜா. ரோஜா திரைப்படம் எதிர்பார்த்ததை விட பெரும் வெற்றியை பெற்றது. மேலும் இப்படம் ஏ.ஆர் ரகுமானுக்கு முதல் படமாக அமைந்து அவரையும் பிரபலப்படுத்தியது.
தளபதி படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இளையராஜா தங்கள் படத்திற்கு இசையமைக்க இயக்குனர்கள் காத்திருந்த சமயம் அது. பொதுவாக படப்பிடிப்பு தளத்திற்கு இளையராஜா வந்தால் அங்கிருக்கும் ஊழியர்கள் மற்றும் சக நடிகர் நடிகைகள் அவர் முன்னால் எழுந்துதான் நிற்பார்கள். தமிழ் சினிமாவில் இளையராஜாவிற்கு அப்படி ஒரு மரியாதை இருந்தது.
இப்படி இருக்க, ஒரு நாள் படப்பிடிப்பிற்கு இளையராஜா வந்துள்ளார். அனைவரும் அவருக்கு மரியாதை செய்தபடி நிற்க, அரவிந்த் சாமி அமர்ந்தப்படி சிகரெட் பிடித்துள்ளார். அருகிலிருந்த நபர் அரவிந்த்சாமியிடம் இளையராஜா வருகிறார். சிகரெட் பிடிக்காதீர்கள் என கூறியுள்ளார்.
அதற்கு அரவிந்த்சாமி இளையராஜாவிற்கு அவரது ஸ்டுடியோவில் என்ன மரியாதை தர வேண்டுமோ அதை கொடுப்பேன். ஆனால் இது படப்பிடிப்பு தளம் இங்கு என் இஷ்டத்துக்குதான் இருப்பேன் என கூறியுள்ளார். அதை கேட்ட இளையராஜா அரவிந்த்சாமி சொல்வது சரிதானே. அவரை அவர் இஷ்டத்துக்கு விடுங்கள் என சொல்லிவிட்டு சென்றுள்ளார். இதனை பேட்டி ஒன்றில் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.