தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தான் காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிகர் அசோக் செல்வன் அண்மையில் நடித்திருந்த நித்தம் ஒரு வானம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து “நெஞ்சமெல்லாம் காதல்” எனும் திரைப்படத்தில் தற்போது நடிகர் அசோக் செல்வன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, இருவக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அசோக் செல்வனுக்கு 33-வயதான நிலையில் இன்னும் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் அசோக் செல்வன் நடிகரும், தயாரிப்பாளருமான ஒருவரின் மகளை காதலித்து, இரு வீட்டாரூம் கலந்து பேசி திருமணத்திற்கு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து விரைவில் இவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த நடிகையின் பெயர் ‘K’ எழுத்தில் துவங்கும் என்று தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து தற்போது திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.