நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது.
அதையடுத்து சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் போன்ற படங்கள் அடுத்து படு தோல்வி அடைந்ததால் மார்க்கெட் இழந்து துவண்டு போயிருந்தார். அதன் பிறகு தான் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் போர் தொழில் என்ற படத்தில் நடித்திருந்தார். க்ரைம் த்ரில்லர் ஜெனரல் அண்மையில் வெளியான இத்திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து வசூல் குவித்து வருகிறது.
இந்த படத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்ப்போது பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், சிறந்த படம் உங்களிடமிருந்து… இன்னும் இதுபோன்ற சுவாரஸ்யமான கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறேன். அருமையான திரைப்படத்தை கொடுத்ததற்கு நன்றி. என பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்திருந்தார்.
அவரது இந்த பதிவிற்கு நன்றி கூறிய நடிகர் சரத்குமார், #போர் தொழில் படத்தின் தயாரிப்பாளர்கள் முதல் நடிகர்கள் வரை பட குழுவினர்கள் ஒவ்வொருவரையும் பாராட்டி கொடுத்த விமர்சனத்திற்கு நன்றி, உங்கள் விமர்சனம் திரைப்படம் பார்க்க வருபவர்களுக்கு சிறந்த படைப்பை அனுபவிக்க ஒரு ஊக்கமாக உள்ளது நன்றி என பதில் அளித்தார். மேலும் நடிகர் அசோக் செல்வன் ப்ளூ சட்டை மாறனின் பாசிட்டிவ் விமர்சனத்திற்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி கூறினார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.