தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் தனக்கென்று ஒரு பெண் ரசிகர்களின் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் அதர்வா.
இவர் சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான நிறங்கள் மூன்று திரைப்படத்தில் நடித்துள்ளார்.அத்திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இப்படத்தின் ப்ரோமஷன் பேட்டியின் போது தன்னுடைய முதல் திரைப்படத்தின் அனுபவங்களை பற்றி பேசினார்.அதில் “நான் சினிமாவில் எத்தனை வருடங்கள் நடித்தாலும் என்னுடைய முதல் காதல் ஜோடியை மறக்க முடியாது என கூறியிருப்பார்.
என்னுடைய முதல் திரைப்படமான பானா காத்தாடி படத்தில் சமந்தா எனக்கு ஜோடியாக நடித்திருப்பார்.அப்படத்தின் முதல் காட்சியே மரத்திற்கு கீழே இருவரையும் நிற்க வைத்து காதல் செய்ய சொன்னார்கள்.அப்போது எனக்கு ஒரு வித பயத்தில் என்ன பேசுவதுனு தெரியாமல் குழப்பத்தில் இருந்தேன்.ஆனால் சமந்தா ரொம்ப எதார்த்தமாக என்னிடம் பேச தொடங்கினார்.
இதையும் படியுங்க: கவின் படத்திலிருந்து விலகிய அனிருத்…படக்குழு திணறல்..!இதெல்லாம் ஒரு காரணமா?
அந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது என்றும்,சமந்தா இன்னும் எத்தனை திரைப்படத்தில் நடித்தாலும் எனக்கு சந்தோசம் தான் என்று அந்த நிகழ்ச்சியில் அதர்வா தெரிவித்திருப்பார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.