சூடான இட்லி சுவையா சாப்பிட நினைக்கும் அட்லீ.. அதுக்குன்னு அடுத்தவன் காசுலயா..!

தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். தற்போது பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில், அட்லீயின் இப்படத்தையும் நெட்டிசன்ஸ் வழக்கம் போலவே ட்ரோல் செய்து வந்தனர். அதன்படி, ஜவான் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல்வேறு படங்களில் இடப்பெற்ற காட்சிகளை பிட்டு பிட்டாக சுட்டு தான் படம் எடுத்து வைத்து இருந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸின் படத்தில் இருந்தே நிறைய காட்சிகள் சுடப்பட்டிருப்பதாக நெட்டிசன்ஸ் கண்டுபிடித்து கலாய்த்து இருந்தனர்.

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும், அட்லீ இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர் ஆகிவிட்டார் என்பது உண்மை. அதாவது, அட்லீ இயக்கிய ஜவான் படம் உலகம் முழுவதும் ரூபாய் 1100 கோடிகள் வசூல் செய்து, அட்லீயை பிரம்மாண்ட உயரத்தில் அமர வைத்துள்ளது.

மேலும் படிக்க: தடபுடலாக நடந்த ரோபோ ஷங்கர் மகளின் திருமணம்.. கொடுக்கப்பட்ட வரதட்சணை எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில், அட்லீ அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றை இயக்கம் உள்ளதாகவும், இப்படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும், அட்லீ தற்போதுயெல்லாம் தமிழ்நாடு பக்கம் வருவதே இல்லையாம். மும்பையிலேயே ஒரு பிரம்மாண்ட ஆபீஸ் போட்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அட்லீ என்னதான் பெரிய பெரிய ஹிட் கொடுத்தாலும், அவருடைய படங்களின் காட்சிகள் பல படங்களில் இருந்து சுடப்பட்டவை என்பதை தவிர்க்க முடியாது.

அதிலும், ஜவான் படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி இவர் அடித்த காப்பியெல்லாம் ரசிகர்களே மறந்து விட்டனர். அந்த அளவுக்கு இருந்தது, இது ஒரு புறம் இருக்க இன்று இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக அட்லீ வளர்ந்து விட்டார். அதாவது, சுமார் 30 கோடிகள் வரை அவரது சம்பளம் உயர்ந்து உள்ளது. இவரின் சொத்து மதிப்பு 60 கோடிகள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு மேல் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

தற்போது, அட்லீ தன்னுடைய அடுத்த பட கதை தயார் செய்துவிட்டு படத்தை இயக்க தயாராக உள்ளார். அட்லீ தன்னுடைய அடுத்த படத்தை புஷ்பா பட நாயகன் அல்லு அர்ஜுனை கதாநாயகனாக வைத்து இயக்க உள்ளாராம். விரைவில், இந்த படத்தை தயாரிப்பதில் மிகப்பெரிய போட்டி நிலவுவதாகவும், அட்லீ இந்த திரையுலகில் இதுவரை யாரும் பெறாத மிகப்பெரிய தொகையை சம்பளமாக கொடுத்து, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தை தயாரித்து வரும் நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அட்லீ குறித்து பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் ஒரு செய்தியை கூறியுள்ளார். அதில், அட்லீ அவர்கள் ஒரு படத்தின் டிஸ்கஷனை ஸ்டார் ஓட்டலில் தான் செய்வாராம். அதுவும் காலை உணவுக்கு மட்டும் இட்லியை கூட ரூபாய் 5000 க்கு ஆர்டர் செய்வாராம். காஸ்ட்லியான உணவையே அவர் விரும்புவாராம். இதை கேட்ட ரசிகர்கள் எல்லாம் எப்புடிறா என்று ஷாக்காகி இருக்கின்றனர். மேலும், அட்லீயை தாண்டி பல இயக்குனர்கள் இன்று ப்ரொடியூசர் தலையில் டிஸ்கஷன் என்ற பெயரில் பல லட்சங்களை கட்டி வருவதாக அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

அமைச்சர் என் குடும்பத்தைப் பற்றி அப்படி பேசினார்.. மருத்துவரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி!

கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…

54 minutes ago

கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!

விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…

1 hour ago

கொரியன் படத்தின் காப்பியா GOOD BAD UGLY.? பிரம்மாண்ட ஹிட் கொடுத்த படத்தின் ரீமேக்?

விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…

2 hours ago

திமுகவுக்கு ‘இது’தான் முக்கியமானது.. கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி!

திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…

2 hours ago

மாயமான +2 மாணவியை பொதுத் தேர்வு எழுத வைத்த காவலர்… நெகிழ வைத்த கோவை சம்பவம்!

கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…

2 hours ago

This website uses cookies.