பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான ஆயுஷ்மான் குர்ரானா பல்வேறு வெற்றி திரைப்படங்களில் தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல கோடி ரசிகர்களுக்கு பேவரைட் ஹீரோவாக இருந்து வருகிறார். ஆயுஷ்மான் குரானா தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு நடிகராக அறிமுகம் ஆனார்.
2016 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் “விக்கி டோனர்” இந்த திரைப்படம் தான் தமிழில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் “தாராள பிரபு” திரைப்படமாக தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. மேலும் “அந்தாதூன்” திரைப்படத்தின் ஹீரோவும் இவர்தான். இந்த திரைப்படம் தான் தற்போது பிரசாந்த் நடிப்பில் வெளிவந்திருக்கும் “அந்தகன்” தமிழ் திரைப்படம்.
இப்படி மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களுக்கும் பிரபலமான ஹீரோவாக இருந்து வரும் ஆயுஷ்மான் குர்ரானா பற்றிய ஒரு ஷாக்கிங் தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது, ஆயுஷ்மான் குர்ரானா ஊட்டச்சத்துக்காக மனைவி தாஹிரா காஷ்யப்பின் தாய்ப்பாலை திருடி குடித்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
ஊட்டச்சத்துக்காக தனது தாய்ப்பாலைத் திருடி புரோட்டீன் ஷேக்காக பயன்படுத்தினார். நான் பாங்காக் பயணத்திற்கு முன், தனது ஏழு மாத குழந்தைக்காக தாய் பாலை பாட்டிலில் எடுத்துவைத்து இருந்தேன். அப்போது தான் இந்த சம்பவம் நடந்தது. பின்னர் படுக்கையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த அவரிடம், தாய்ப்பால் பாட்டில் காணவில்லை என்று கேட்டேன்.
அதற்கு அவர் வினோதமான குலுங்கி மீசையைத் துடைத்துக்கொண்டே சிரித்தார். மேலும், நான் தான் திருடி குடித்தேன். அது சரியான வெப்பநிலையில் இருந்தது. அதிக சத்தானதாக இருந்ததால் குடித்துவிட்டதாக கூறினார். அன்றில் இருந்து, ஒவ்வொரு முறையும் பயணத்தின் போது, தாய்ப்பால் பாட்டிலை அவர் திருடாமல் இருப்பதற்காக மறைத்து வைத்து இருந்தேன் என்று கூறியிருக்கிறார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.