விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் த்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.
குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில், அப்பாவியாக இருந்த இந்த கதாபாத்திரம் தற்போது சில வில்லத்தனத்தோடு இருப்பது போல ராதிகா கதாபாத்திரம் காட்டப்பட்டு வருகிறது. இதனிடையே, பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் புதியதாக என்ட்ரி கொடுத்தார்.
கோபி குடிப்பழக்கத்தால் அனைவரையும் கஷ்டப்படுத்தி வர இப்போது ராதிகா பாக்கியா வீட்டிற்குள் சென்று அவரை வெளியே செல்ல சொல்கிறார். அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண மக்களும் ஆர்வமாக உள்ளார்கள்.
இந்நிலையில், இந்த தொடரின் மூலம் மக்களிடம் நன்கு பிரபலமான கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஸ்க்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது.
இதனிடையே, பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து தான் சில எபிசோட்டிற்கு பின் விலகியுள்ளதாக கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாக்கியலட்சுமி சீரியல் இந்த அளவிற்கு பிரபலமாக முக்கிய காரணமாக இந்த கதாபாத்திரம் கோபி தான்.
தற்போது நடிகர் சதீஷ் வெளியிட்ட வீடியோவில், தனிப்பட்ட காரணத்திற்காக இனிமேல் கோபியாக தன்னால் நடிக்க முடியாது என்று கண்ணீர் விட்டபடி எமோஷ்னலாக தெரிவித்து இருக்கிறார் சதீஷ். இதுகுறித்து, இணையத்தில் அவர் வெளியிட்ட அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் வேண்டாம் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே, சீரியலில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷ். இவர் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் சில காரணங்களால் தொடரில் இருந்து விலகிவிட்டார்.
இவருக்கு பதில் கடைசியாக சன் தொலைக்காட்சியில் முடிந்த கண்ணான கண்ணே தொடரில் நடித்திருந்த ப்ருத்விராஜ் கோபியாக பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க இருப்பதாக தெரியப்படுகிறது, ஆனால் எந்த அளவிற்கு இந்த தகவல் உண்மை என்பது தெரியவில்லை.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
This website uses cookies.