விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.
குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில், அப்பாவியாக இருந்த இந்த கதாபாத்திரம் தற்போது சில வில்லத்தனத்தோடு இருப்பது போல ராதிகா கதாபாத்திரம் காட்டப்பட்டு வருகிறது. இதனிடையே, பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் புதியதாக என்ட்ரி கொடுத்தார்.
இதனிடையே, பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துவரும் நடிகர் நடிகைகளின் சம்பளம் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதாவது சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுத்த ரஞ்சித்துக்கு எல்லோரையும் விட அதிக சம்பளம் வழங்கப்படுகிறதாம்.
சுசித்ரா ஒரு நாள் சூட்டிங்கிற்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெறுகிறாராம். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷுக்கு 12,000 ரேஷ்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் ராதிகாவிற்கு 12,000 சம்பளமும் தரப்பட்டு வருகிறதாம்.
மேலும் எழில் ரோலில் நடிக்கும் விஷாலுக்கு பத்தாயிரம் ரூபாயும், ஜெனி கதாபாத்திரத்தில் நடிக்கும் திவ்யா கணேஷுக்கு பத்தாயிரம் ரூபாயும், செழியனுக்கு பத்தாயிரம் ரூபாயும் இனியாவிற்கு 8000 ரூபாயும் ஒரு நாளுக்கு தரப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.