விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் த்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.
குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.
மேலும் படிக்க: மூளை நரம்பில் ஏற்பட்ட பிரச்சனை.. கை விரித்த டாக்டர்; வேதனையை பகிர்ந்த விஜய் டிவி நடிகை..!
இந்நிலையில், சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை திவ்யா கணேஷ். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான “கேளடி கண்மணி” என்ற சின்னத்திரை தொடர் மூலம் அறிமுகமாகி, சில சீரியல்களில் நடித்து வந்த திவ்யா கணேஷ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார்.
மேலும் படிக்க: 15 வயசுல வீட்டை விட்டு ஓடி வந்த பொண்ணு.. இப்போ லேடி சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கும் நடிகை; ஆனா.. அது நயன் இல்லப்பா..!
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற திவ்யா கணேஷ் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் திவ்யா கணேஷ், தான் விமானத்தில் சென்னை வந்து கொண்டு இருந்த போது, அந்த நேரத்தில் தன் அருகில் இருந்த நபர் தன்னுடைய இடுப்பில் கைவைத்ததால், தனக்கு ரொம்ப கோபம் வந்து அப்போது தான் அந்த நபரை பளார் பளார்னு நான்கு அறைவிட்டேன் என்று திவ்யா கணேஷ் தெரிவித்துள்ளார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.