ரஜினியை வைத்து அண்ணாமலை, பாட்ஷா, வீரா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, சூப்பர்ஸ்டாருடன் நான்காவது முறையாக இணைந்த படம் தான் பாபா.
இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்ததோடு மட்டுமின்றி, இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி தனது லோட்டஸ் இண்டர்நேஷனல் கம்பெனி மூலம் தயாரிக்கவும் செய்திருந்தார்.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். மேலும் கவுண்டமனி, விஜயகுமார், ஷாயாஜி ஷிண்டே, ரீனா பரத்வாஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்திற்கு சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்திருந்தார். கடந்த 2002-ம் ஆண்டு ரிலீசான போது இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இருப்பினும் ரஜினியின் மனதுக்கு நெருக்கமான படமாக பாபா இருந்து வந்தது. இதன் காரணமாக இப்படத்தை தற்போது டிஜிட்டலில் மெருகேற்றி, சில மாற்றங்களை செய்து மீண்டு ரீ-ரிலீஸ் செய்து உள்ளனர். இன்று பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள பாபா திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணிக் காட்சியும் திரையிடப்பட்டது.
மாண்டஸ் புயல் அச்சுறுத்தல் இருந்தாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாத ரஜினி ரசிகர்கள் இன்று அதிகாலையிலேயே தியேட்டர் முன் கூடி பட்டாசு வெடித்தும், தாரை தப்பட்டை முழங்க ஆடிப்பாடியும் இப்படத்தை கொண்டாடினர்.
ஏற்கனவே ரிலீசான படமாக இருந்தாலும் புது படத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்குமோ அந்த அளவுக்கு பாபா படத்தின் ரீ-ரிலீசுக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தநிலையில் சென்னை வெற்றி திரையரங்கில் பாபா படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போது படத்தில் ஒரு காட்சியில் கவுண்டமணி, ரஜினி திரையரங்குக்குள் செல்வது போலவும், கவுண்டமணி பாபா வராரு லைட் எல்லாம் போடு என்று சொல்லுவார்.. படத்தில் லைட் போட்டது போல, வெற்றி திரையரங்கில் லைட் போடப்பட்டது.
உடனே ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். ரஜினி கவுண்டமணியிடம் லைட்டை ஆஃப் செய்ய சொல்லுவார்.. பின்னர் அது போலவே லைட் ஆஃப் செய்யப்பட்டது. இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.