புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார்.
முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். பின்னர் மீண்டும் இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி கலக்கி வருகிறார்.
இந்நிலையில், பாலா, சூர்யா காம்போவில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்துள்ளது. அதுமட்டுமின்றி, சூர்யாவின் சினிமா வளர்ச்சிக்கு பாலா தான் முக்கிய காரணம் என்பதே பலரும் அறிந்த உண்மை. இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு நந்தா படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சம்பவத்தை குறித்து பேசி உள்ளார்.
அதில், அவர் நந்தா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக லைலாவை போடக்கூடாது என சூர்யா விடாப்பிடியாக இருந்திருக்கிறார். அந்த படத்தில், ஜோதிகாவை ஹீரோயினாக போடுங்கள் என பாலாவிடம் தயங்கி தயங்கி சூர்யா கேட்டிருக்கிறார். ஆனால், படத்திற்கு லைலா தான் சரியாக இருப்பார் என்ற எண்ணம் பாலாவுக்கு இருந்துள்ளது. இதனால், சூர்யாவிடம் இந்த படத்திற்கு ஜோதிகா சரியாக இருக்க மாட்டார். நீ ஏதும் லவ் பண்றியா என கேள்வி எழுப்பி அதெல்லாம் முடியாது என்று கறாராக பாலா கூறிவிட்டாராம். அதன் பின்னர் கௌதம் மேனன் சூர்யா, ஜோதிகாவை ஒரு படத்தில் நடிக்க வைத்தார். அந்த சமயத்தில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது என்று செய்யாறு பாலு கூறியுள்ளார்.
நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.இந்த செய்தி திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியைக்…
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
This website uses cookies.