அயலான் பட ரிலீஸுக்கு தடை.. மீண்டும் நொந்துபோன சிவகார்த்திகேயன்..!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.

பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார்.

தற்போது சிவகார்த்திகேயன் கைவசம் அயலான் திரைப்படம் உள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பால சரவணன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். 2017ம் ஆண்டே துவங்கிய இப்படம் சில பிரச்சனையால் 5 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

இந்நிலையில், படம் வருகிற ஜனவரி மாதம் 2024 பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதே போல், நடிகர் வைபவ், பார்வதி நாயர், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்த ஆலம்பனா திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நிறைவடைந்தது.

ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டது. புதுமுக இயக்குனர் பாரி கே.விஜய் உருவாக்கிய இந்த படம் சுமார் மூன்று வருட காத்திருப்பதற்குப் பிறகு ஒரு வழியாக டிசம்பர் 15ஆம் தேதியான இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இரண்டு படங்களையும் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில் எல்கேஜி ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தங்களுக்கு தரவேண்டிய 14.70 கோடி ரூபாயை நிலுவை தொகை தரவில்லை என்று கூறி டி எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.

நிலுவை தொகையை கொடுக்கும் வரை அயலான் மற்றும் ஆலம்பனா படங்களை வெளியிட அனுமதிக்க கூடாது என்று டி எஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன் டி ஆர் எஸ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் வாதத்தில் முகாந்திரம் இருப்பதாக கூறி அயலான் மற்றும் ஆலம்பனா படங்களை வெளியிட 4 வாரங்கள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி ஒன்பதாம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

Poorni

Recent Posts

அதிமுக பாஜக கூட்டணி… எனக்கு ஒரு டவுட்டு : பரபரப்பு புகார் கூறிய கனிமொழி எம்பி!

தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…

5 hours ago

சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?

சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…

6 hours ago

Toxic மக்களே, நீங்க எப்படித்தான் வாழ்கிறீர்கள்? வைரலாகும் திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி…

பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…

8 hours ago

அண்ணாமலை மாற்றம் என அமித்ஷா பதிவிட்ட மறுநொடி.. காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…

8 hours ago

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?

இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…

8 hours ago

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

9 hours ago

This website uses cookies.