கட்டைவிரல் பிடிங்கிட்டாங்க… திருமணமே ஆகல… என் வாழ்க்கையை அழித்தது வடிவேலு தான் – பிரபல காமெடி நடிகர் வேதனை!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராகா வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகர் பாவா லக்ஷ்மணன். இவர் தமிழ் சினிமா மட்டும் இன்றி உலகில் பல்வேறு நடிகர்களின் காமெடி படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக “வா மா மின்னல்” காமெடி இவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. ஆனால், சில ஆண்டுகளாகவே இவர் படங்களில் பெரிதாக நடிப்பதில்லை.

மிகவும் வறுமையில் இருக்கும் இவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு மயில்சாமி, விவேக், சிங்கமுத்து, மனோ பாலா போன்ற நடிக்கிறாள் செய்து வந்த உதவியால் இத்தனை உயிர் பிழைத்து வந்தேன் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், எனக்கு சுகர் அதிகமானதால் கடந்த 10 நாட்களாக ஓமந்தூரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடைய கட்டை விரலை எடுத்துவிட்டார்கள், காயம் சரியாக 4 முதல் 5 மாதங்கள் ஆகும் என சொன்னார்கள்.

நான் இப்போது வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் நண்பர்கள் உதவியால் வாழ்கிறேன். கட்டை விரல் எடுத்த வலியை விட வாய்ப்பு கிடைக்காதது தான் பெரிய வலியாக இருக்கிறது. எனக்கு சினிமாவில் வடிவேலு தவிர நிறைய பேர் உதவியிருக்கிறார்கள். எனக்கு இப்போது 58 வயதாகிறது. நான் கல்யாணமே பண்ணிக்கல.
குழந்தைகள் இருந்தால் நான் ஏன் உதவி கேட்க போகிறேன்.

அதனால் திரைத்துறையிடம் உதவியை எதிர்ப்பார்க்கிறேன் என வேதனையுடன் கூறியிருக்கிறார். மேலும் வடிவேலு மோசமானவர். அவரை விட யாரேனும் நன்றாக நடித்துவிட்டால் தன் நடிப்பை காட்டிலும் மற்ற நடிகர்கள் நடிப்பை மக்கள் பெரிதாக பேசினால். அவர்களை அத்தோடு ஏறகட்டிவிடுவார் வடிவேலு. அவர்களை வளரவே விடமாட்டார். அப்படித்தான் மாயி படத்தில் வா மா மின்னல் காமெடியில் நான் பெரிதாக பேசப்பட்டதால் வாய்ப்புகள் இழந்தேன் என உருக்கமாக கூறினார்.

Ramya Shree

Recent Posts

நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!

ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…

1 hour ago

நீங்களாம் என் படத்தை பார்க்க கூடாது- மேடையில் எச்சரித்த நானி பட இயக்குனர்! என்ன காரணமா இருக்கும்?

நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…

1 hour ago

திமுக நிகழ்ச்சியில் பீர் பாட்டிலுடன் கறி விருந்து.. இளைஞரணி நிர்வாகி மறுப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…

2 hours ago

திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?

டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…

2 hours ago

சிக்னலுக்காக காத்திருந்த ரயிலுக்குள் புகுந்த கும்பல்… கத்தியை காட்டி நகை, பணம் கொள்ளை!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…

2 hours ago

நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…

இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…

3 hours ago

This website uses cookies.