பார்த்திபன் ஒரு மார்பகத்தை காட்ட சொன்னா எல்லாத்தையும் அவிழ்த்து…. மீண்டும் சீண்டிய பயில்வான்?
Author: Shree23 June 2023, 5:22 pm
பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல்கள் படத்தில் ஆபாசமான காட்சியில் நடித்து பரபரப்பை கிளப்பியவர் நடிகை ரேகா நாயர். சீரியல் நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக முகமறியப்பட்டார்.
இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார். இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி. சித்ராவின் தற்கொலை ரகசியங்களை குறித்து கூட பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
அதன் மூலம் கிடைத்த புகழை வைத்து தான் திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. அதன் பின்னர் இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் ஆபாச காட்சிகளில் அரைநிர்வாணமாக நடித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இதனால் அவரை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் மோசமாக விமர்சிக்க அவரை ரேகா அடித்து துவைத்ததெல்லாம் செய்தியாக வெளியானது.
இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் சர்ச்சைக்குரிய வகையில் ரேகா நாயர் குறித்து பேசி மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார். அதாவது இரவின் நிகழல்கள் படத்தில் குழந்தைக்கு பாலூட்டும் காட்சியில் பார்த்திபன் ஒரு மார்பகத்தை தான் காட்டச்சொன்னார். ஆனால் ரேகா நாயர் இரண்டு சேலையை அவிழ்த்துப்போட்டு அனைத்தையும் காட்டி தாராளமாக நடித்து கொடுத்தார் என கூறி மீண்டும் ரேகா நாயரை சீண்டியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.