இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.
அதிதி ஷங்கர் தமிழில் முதலில் நடிக்கும் திரைப்படம் விருமன். இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். நடிகை ஜோதிகாவும் சூர்யா 2D புரோடக்சன்ஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்தது.
இந்த திரைப்படத்தில் அதிதி சங்கர் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கஞ்சா பூவு கண்ணால’ என்ற பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதிதி ஷங்கர் தற்போது அவ்வப்போது, ஹாட் போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை சூடேற்றியும் வருகிறார்.
இந்நிலையில், தன் குடும்ப வாழ்க்கையில் இயக்குனர் சங்கர் தன்னுடைய இரு மகள்களால் நிம்மதி இல்லாமல் இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கருக்கு சில ஆண்டுகளுக்கு முன் தன்னைவிட பணக்கார குடும்பத்தில் மகளை திருமணம் செய்து வைத்தாராம் சங்கர்.
இதனிடையே, கிரிக்கெட் வீரர் ரோகித் என்பவரை திருமணம் செய்து வைத்து அவர் மகள் நன்றாக இருப்பாள் என்று நினைத்து பார்த்த சில மாதங்களில் அவரை பிரிந்துவிட்டார். இவர்களின் விவாகரத்து வழக்கு தற்போது நடந்து வருகிறதாம்.
அதேபோல், இரண்டாம் மகள் அதிதி டாக்டர் பட்டம் முடித்த பின் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அப்பாவிடம் அடம் பிடித்து விருமன் படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாவீரன் படத்தில் தற்போது நடித்து உள்ளார். ஆனால், ஒப்பந்தம் ஆனதே சங்கருக்கு தெரியாது என்றும், சினிமாவே வேண்டாம் என்று எவ்வளவு சொல்லியும் அப்பா பேச்சை கேட்காமல் தனது முடிவை எடுத்து வருகிறாராம் அதிதி. இப்படி இருமகள்களை நினைத்து நிம்மதி இல்லாமல் தவித்து சினிமாவில் நாட்டம் இல்லாமல் இருந்து வருகிறாராம் ஷங்கர் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
This website uses cookies.