ஏ ஆர் ரகுமானுக்கு பரம்பரை நோய்…உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன் ..!
Author: Selvan21 November 2024, 11:37 am
ஏ ஆர் ரகுமான் திருமண உறவு முறிவு
ஏ.ஆர்.ரகுமானும் அவரது மனைவியும் விவாகரத்து பெற்று திரையுலக ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தனர்.29 வருட திருமண வாழ்க்கைக்கு END CARD போட்டனர்.
இதனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் யோசித்து முடிவெடுத்திருக்கலாமே என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்தனர். சூழல் இப்படி இருக்க அவருடைய மகன் அமீனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த மாதிரியான நேரத்தில் எங்களுக்கான பிரைவேசியை கொடுக்குமாறு உங்கள் ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
தாக்கிய பயில்வான் ரங்கநாதன்
இந்நிலையில்,பயில்வான் ரங்கநாதன் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.அதில் ஏ.ஆர்.ரகுமானுக்கு வீட்டில் பார்த்து வைத்த திருமணம் என்று எல்லோரும் நினைத்து கொண்டிருக்கின்றனர்,ஆனால் அவர்கள் இருவரும் ஒருவர் ஒருவரை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டனர்.
ரகுமானுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு,அதனால் தான் இந்த விவாகரத்து என்றுலாம் சொன்னார்கள்,அதெல்லாம் சுத்த பொய் என்றும்,இதில் தனுஷை இழுப்பதும் தேவையில்லாத ஒரு செயல் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பின்பு இந்த விவாகரத்து அவர்களுடைய பரம்பரை நோய் என்று குறிப்பிட்டு,முதலில் அவரது சகோதரி ஒருவர் பத்திரிகையாளர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றார்.
இதையும் படியுங்க: சொர்க்கவாசல் countdown ஸ்டார்ட்…படக்குழு கொடுத்த அப்டேட்…!
பிறகு ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் ஜிவி பிரகாஷ் சைந்தவியை பல வருடங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றார். இப்போது ஏ.ஆர் ரகுமானும் விவாகரத்து பெற்றிருக்கிறார்.
முக்கியமாக இந்த விவாகரத்துக்கு காரணமே ஏ.ஆர் ரகுமான் கடந்த ஒரு வருடமாக வீட்டுக்கே வரவில்லை,குடும்பத்துடன் நேரம் செலவிடவில்லை என்பதுதான் என்று அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.