இந்திய சினிமாவின் மர்லின் மன்ட்ரோ என்று புகழப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதா செல்லுலாய்டு முதல் டிஜிட்டல் வரையிலான இந்திய சினிமா வரலாற்றில் தன்னுடைய இடத்தை வேறொரு நடிகையால் நிரப்ப முடியாத படிக்கு ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறார். 1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக திரைத்துறையில் வாழ்க்கையை துவங்கிய இவர் தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தினார்.

அந்தப் பெயரே இவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது. இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு விதமான கிளாமரான காட்சிகளில் நடித்தார். திருமண வாழ்க்கையில் பெரும் துன்பவங்களை அனுபவித்த சில்க் சென்னைக்கு பிழைப்பு தேடியும் புது வாழ்க்கை தேடியும் ஓடிவந்து இவரது உறவினர் வீட்டில் தங்கினார்.

பல்வேறு மலையாள மொழி திரைப்படங்களில் அதிகம் படங்கள் நடித்துள்ளார். இவரது மரணம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. இந்நிலையில் தற்போது சில்க் ஸ்மிதா குறித்து பகீர் கிளப்பும் வகையில் ஒரு விஷயத்தை கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்.

அதாவது சில்க் ஸ்மிதா பெயரை கேட்டாலே இளைஞர்கள் மனம் உருகி அவரை கற்பனையிலே காதலிப்பார்கள். அவரை ஒரு முறையாவது பார்த்துவிடவேண்டும் என எத்தனையோ பேர் ஏக்கம் கொண்டிருந்தார்கள். அப்படி இருக்கும் போது அவரை சடலமாக பிணவறையில் போட்டிருந்த சமயத்தில் நிச்சயம் யாரேனும் உடலுறவு வைத்திருந்திருக்கலாம் என கூறி சர்ச்சை கிளப்பியுள்ளார்.