திருமணத்திற்கு பின் இத்தனை பேரை காதலித்தாரா சரத்குமார்.. லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே..!

சினிமாத்துறையில் திருமணம் என்பது எப்படி வேண்டுமானாலும் மாறும். திருமணம் செய்யும் நட்சத்திர ஜோடி பிரிந்த கதைகளும் உண்டு. திருமணம் செய்யாமல் லிவ்விங் டூகெதர் வாழ்க்கைய வாழ்ந்து கசந்து போய் பிரிந்தவர்களும் உண்டு.

திரைதுறையில் பிரியாமல் இன்னும் ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்து வாழ்ந்து வரும் ஜோடிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும் முதல் திருமணம் செய்து கொண்டு இரண்டாவதாக சினிமா நடிகைகளை திருமணம் செய்த பிரபல நடிகர்கள் நிறைய பேர் உள்ளனர்.

அந்த வகையில் லிஸ்டில் சேர்ந்திருப்பவர் சுப்ரீம் ஹீரோ சரத்குமார். டெல்லியில் பிறந்தாலும் தாய் தந்தையர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்தான். பணி நிமித்தம் காரணமாக சரத்குமார் குடும்பம் டெல்லிக்கு சென்றது.

நடிப்பில் ஆர்வமுள்ள அவர், தனது உடம்பை கட்டுமஸ்தாக வைப்பதில் உறுதியாக இருந்தவர். படிப்பு எல்லாமே சென்னையில்தான், பாடிபில்டராக வலம் வந்த சரத்குமார் என்சிசியில் சேர்ந்தார். 1974ல் மிஸ்டர் மெட்ராஸ் ஆணழகன் போட்டியில் கலந்து வெற்றி பெற்றவர்.

பின்னர் பத்திரிகையாளராக பணிபுரிந்த அவர், கண்ணதாசனை சந்தித்த போது படத்தை தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் 1986ல் சின்னப்பூவே மெல்லப்பூவே பேசு படத்தில் நடித்தார். ஆரம்பத்தில் வில்லன் ரோல்களில் நடித்து வந்த இவர், பின்னர் கதாநாயகனாக உருவெடுத்தார். கதாநாயகனாக உருவெடுத்த பின் வாய்ப்புகள் குவிந்தது,. அவர் நடித்த படங்கள் ஹிட் அடித்தது.

1984ல்சாயா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட அவருக்கு வரலட்சுமி சரத்குமார், பூஜா சரத்குமார் என்ற இரு பெண்கள் உள்ளன. இதையடுத்து 2000ம் ஆண்டு சாயாவை விவகாரத்து செய்த சரத்குமார், இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்தார்.

அந்த கட்டத்தில் சரத்குமார் சிறந்த கதாநாயகனாக வலம் வந்தார். தன்னுடன் நடித்த நடிகைகளுடன் கிசுகிசுக்கள் எழுந்தன. இருந்த போதிலும், தேவயானியுடன் அதிக படங்களில் நடித்ததால் அவருடன் சரத்குமாருக்கு காதல் ஏற்பட்டது.

பின்னர் தேவயானியின் பெற்றோரிடம் நேராக பெண் கேட்க சென்றுள்ளார். ஆனால் தேவயானியின் தாயார், ஏற்கனவே திருமணமானதை காரணம் காட்டி நிராகரித்துள்ளார்.

பின்னர் நம்ம அண்ணாச்சி படத்தில் நடித்த போது, ஹீராவுடன் காதல் வயப்பட்டார் சரத். ஆனால் ஹீரா, சுப்ரீம் ஹீரோவுக்கு பை பை சொல்லிவிட்டார். ஆனால் சரத்குமார், அடுத்தடுத்து படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

அப்போது நடிகை நக்மாவுடன் நடித்த போது இருவரும் காதல் வயப்பட்டனர். நக்மாவுக்காக நிறைய செலவுகள் செய்த சரத்குமார், ஒரு படம் முழுவதும் வெளிநாட்டிலேயே படப்பிடிப்பு நடத்தி தயாரித்து நடித்தார். ஆனால் அந்த படம் படுதோல்வியை சந்தித்தது.

நக்மாவுக்கும், சரத்குமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திருமணம் செய்வதற்கு முன்பே பிரிந்து விட்டனர். இதையடுத்து கடும் பண நெருக்கடியில் தவித்த போது ராதிகாவுடனான நட்பு ஏற்பட்டது. ராதிகாவும் சரத்குமாருக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார்.

நாளடைவில் இவர்கள் நட்பு காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். ராதிகாவும் சில கண்டிஷன்களை போட்டு சரத்குமாரை திருத்தியுள்ளார். 2001ம் ஆண்டு இந்த நட்சத்திர ஜோடி திருமணம் செய்தது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

1 hour ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

2 hours ago

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் முதல் காட்சி வெளிவராது- விநியோகஸ்தர்கள் திட்டவட்டம்

தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

3 hours ago

அமைச்சரின் சகோதரர் கொலை வழக்கில் போலி என்கவுண்டர் நடத்த பிளான் : சீமான் பகீர் குற்றச்சாட்டு!

திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…

4 hours ago

மகன் தீ விபத்தில் சிக்கியதை அறிந்தும் மக்களை சந்தித்த துணை முதல்வர்.. நெகிழ வைத்த பவன் கல்யாண்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…

4 hours ago

This website uses cookies.