தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அடுத்த மறுநாள் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.
இந்நிலையில், விஜயகாந்தின் இறப்பு தன்னை பாதித்ததாக பத்திரிகையாளர் பயில்வான் வெளிப்படுத்தியுள்ளார். அவர் நேர்காணல் ஒன்றில் கூறுகையில், பல நடிகர்கள் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள். அதில், கேப்டனும் ஒருவராக இருந்தது அதிர்ச்சி அளிக்கிறது என்றும், தன்னுடைய இறப்பை முன்கூட்டியே தெரிந்து கொண்ட கேப்டன் தன்னுடைய மனைவியை கட்சியின் பொதுச்செயலாளராக நியமித்து விட்டார். அதுதான் நமக்கு தெரிந்த தகவல்.
இப்போது உள்ள சூழ்நிலையில், பிரேமலதாவை அவ்வாறு ஏற்றுக் கொள்வது தொண்டர்களுக்கு, கடினமாக தான் இருக்கும். அதனால்தான், விஜயகாந்த் அவரின் இறுதிப் பயணத்தை தொடங்குவதற்கு முன்பே அரசியல் பயணத்தில் தன் மனைவியை ஒரு பொறுப்பான பதவியில் வைத்து விட்டு சென்றிருக்கிறார். அப்படித்தான் நாம் நினைக்க முடியும் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதமணி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசாங்கத்தை பொருத்தவரை ஆளுநருக்கு எதிரான…
விழுப்புரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய, திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, விலைமாதர்…
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…
அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
This website uses cookies.