பொய்யா பேசிக்கிட்டு இருக்கா.. ஆண்டவன் தண்டனை கொடுப்பான்.. நடிகையை விளாசிய பயில்வான்..!
Author: Vignesh12 June 2024, 7:02 pm
தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும். இது பெரிய தொழிலாகவே அவர் செய்து வருகிறார். இதற்காக பல யூடியூப் சேனல்கள் அவருக்கு ஒரு நல்ல தொகை கொடுத்து நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் குறித்து பேச வைக்கிறார்கள். அதை ரசிக்க ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. அப்படி அவர் பேசும் விஷயங்களுக்கு வரும் சர்ச்சைகளையும் தைரியமாகவே எதிர்கொண்டு வருகிறார்.
மேலும் படிக்க: பாத்ரூமில் போட்டோ எடுக்குறது தான் இப்ப ட்ரெண்டாம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட குளியல் அறை புகைப்படம்..!
இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு பயில்வான் மற்றும் நடிகை சகிலா கலந்து கொண்ட ஒரு பேட்டியில் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகள் ஏற்பட்டது. அதில், நடிகைகளை பற்றி பேசி வரும் பயில்வானின் மகளே ஒரு லெஸ்பியன் தான் இதை ஏன் அவர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்று நடிகை சகிலா வெளுத்து வாங்கி கேள்வி கேட்டிருந்தார்.
மேலும் படிக்க: ஒரே ஒரு படம் ஓஹோன்னு வாழ்க்கை.. ரன்பீர் உடன் எல்லைமீறிய காட்சி.. 14 கோடிக்கு பங்களா வாங்கிய நடிகை..!
அதற்கு பதில், அளித்த பயில்வான் இப்படி எல்லாம் பேச வேண்டாம். உங்கள் நாக்கு அழுகிவிடும் என்று கோபப்பட்டு கொந்தளித்தார். மேலும், பாடகி சுசித்ரா கூட பயில்வான் பற்றி அவதூறுகளை பரப்பிய நிலையில், அதற்கெல்லாம் பயில்வான் பதிலடி கொடுத்திருந்தார். லெஸ்பியன் என்று கூறப்பட்டு வந்த பயில்வான் ரங்க நாதனின் மகளுக்கு அவர் வீட்டிலேயே ஆண் ஒருவருக்கு நிச்சயதார்த்தம் நடத்தி அவசர அவசரமாக முடித்திருக்கிறார். இது குறித்து அதிகாரபூர்வ புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.
மேலும் படிக்க: அர்ஜுன் வீட்டு கல்யாணம்னா சும்மாவா.. தலைக்கு இத்தனை ஆயிரமா?.. மொத்த செலவை கேட்டா தல சுத்துது..!
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பயில்வான் ரங்கநாதன் மகள் குறித்து பேசியுள்ளார். அதில், அவர் பேசுகையில் என் மகளைப் பற்றி ஒரு நடிகை தகாத வார்த்தையை சொல்லிவிட்டார். அவரின் பெயரைக் கூட நான் சொல்ல விரும்பவில்லை. இதனால், என்னுடைய குடும்பத்தார் மிகவும் வருத்தப்பட்டனர். இந்த சூழலில், என் சம்பந்தி திருமணத்தை சீக்கிரமாக முடித்து விடலாம் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: வனிதா மகனுடன் ரொமான்ஸ் பண்ண துடிக்கும் பிரபல இயக்குனரின் மகள் – Shooting எப்போ தெரியுமா?..
இதில், எங்கள் வீட்டில் உள்ளவர்களும் சம்மந்தி வீட்டில் உள்ளவர்களும் கலந்து கொண்டார்கள். ஏற்கனவே, இருவரும் பேசி பழகி வருகிறார்கள். நான் மனைவியிடம் கலந்து பேசி திருமண தேதியை முடிவு செய்துள்ளோம். என் மருமகன் சிவா எம்பிஏ படித்துள்ளார். என் மகள் பிகாம் படித்திருக்கிறாள். இருவரும் ஐடியில் வேறு ஒரு இடத்தில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அந்த நடிகை, என் மகளை தவறாக பேசிவிட்டார். அதன் விளைவை அவர் அனுபவிப்பார் எல்லாம் ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.