கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடிகை நயன்தாரா தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடித்த கையோடு விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி ஸ்பெயின் மற்றும் துபாயில் ஹனிமூனை கொண்டாடினர். சமீபத்தில் நடிகை நயன்தாரா காதல் கணவரின் பிறந்தநாளை துபாயில் கலக்கலாக கொண்டாடினார்.
இந்த நிலையில் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவன், நயன்தார தம்பதிக்கு ரசிகர்கள், மற்றும் திரைத்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனை பார்த்த சிலர் எதிர்மறையான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றாரா நயன்தாரா என கேட்டு விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
முன்னதாக , நயன்தாரா குறித்து பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தனது யூட்யூப் சேனலில் பகீர் தகவலைத் தெரிவித்து இருந்தார். அதாவது குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் நயன்தாராவுக்கு, வயது அதிகம் ஆகிவிட்டதால் சிக்கல் ஏற்படும் என மருத்துவரை அணுகியதாகவும், நயன்தாரா அதிகளவு கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தியதால் அவருக்கு குழந்தை பிறப்பு என்பது கடினம் என்றும் கூறியிருந்தார்.
இதனால், நயன்தாரா வாடகைத் தாயின் மூலம்தான் குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறார் என கூறியிருந்தார். இதற்கு நயன்தாரா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை.
இந்நிலையில் நயன்தாரா தற்போது வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளதை அறிந்த நெட்டிசன்கள் பயில்வான் ரங்கநாதன் சொன்னது அப்படியே நடந்து விட்டது என கூறி வருகின்றனர்.
அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் சினிமாவில் டாப் ஹீரோயினாக உள்ள நயன்தாரா செய்தது சரிதான் என ஆதரவாக கூறி வருகின்றனர்.
மேலும் நடிகை நயன்தாரா தான் நடிக்கும் படங்களில் தாலியை கழட்டமாட்டேன் என்று நிபந்தனையுடன் தான் நடித்து வருவதாகவும் பயில்வான் தெரிவித்துள்ளார்.
நடிகை நயன்தாரா புதிய படங்களில் ஒப்பந்தமாகவில்லை என்று கூறியுள்ள பயில்வான் கதை சரியில்லை என வரும் வாய்ப்புகளையும் அவர் தட்டிக் கழித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ஒரே ஒரு இந்திப் படத்தில் தான் கமிட் ஆகி, அதிலும் கொஞ்ச காட்சிகள்தான், நடித்து முடித்து விட்டார் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.