சினேகாவின் வாழ்க்கை மாறினதுக்கு இதுதான் காரணம்.. ரகசியத்தை உடைத்த பயில்வான்..!
Author: Vignesh15 April 2024, 5:59 pm
புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.
இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள்.
மேலும் படிக்க: அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. மனம் திறந்து பேசிய மௌனிகா..!
இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது. விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார். பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், சினேகா ஆரம்பத்தில் மலையாள சினிமாவில் தான் நடித்து வந்தார். அந்த சமயங்களில் சினேகா இரவு பார்ட்டிக்கு சென்று பல பட வாய்ப்புகளை வாங்கியதாக பிரபல பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: இனி செட் ஆகாது.. Vijay TVக்கு குட்-பை சொல்லிட்டு புதிய தொழில் தொடங்கிய அறந்தாங்கி நிஷா..!
அதாவது, தன்னுடைய வாழ்க்கை ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டதால்தான் மாறியது என்று சினேகாவை கூறியதாகவும், அதாவது ஒருமுறை மலையாள ஸ்டார் நைட் என்ற நிகழ்ச்சியை பார்க்க சினேகா சென்றாராம். அப்போது, சினேகாவை பார்த்த பலரும் பார்ப்பதற்கு ஹீரோயின் போலவே இருக்கிறீர்கள் என்று கூறி முதன் முதலில் ஒரு மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்களாம். அப்படம், பெரிதாக வெற்றியாகவில்லை. இதையடுத்து, தமிழில் விரும்புகிறேன் படத்தின் மூலமாக அறிமுகமாகி நல்ல ஒரு அடையாளம் கிடைத்தது என்று சினேகாவே கூறியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.