திருமணமான நடிகையுடன் பஜக்.. பஜக்.. ஜிவி பிரகாஷ் சைந்தவி பிரிய காரணமே இதுதான்.. அதிர்ச்சி கொடுத்த பயில்வான்..!
Author: Vignesh10 June 2024, 2:33 pm
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர், நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து, அதில் தனது முழு திறமையை காட்டி நல்ல இசையை தொடர்ந்து கொடுத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயில், செல்பி, ஐயங்காரன் ஆகிய படங்களில் ஜிவி.பிரகாஷின் நடிப்பு நன்றாக இருந்தாலும், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்ட ஜென்டில்மேன் படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடலை முதன்முதலாக பாடினார் அசத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: யாரையும் நம்பிறாதீங்க.. மருத்துவமனையில் இருந்து திடீர் வீடியோ வெளியிட்ட மதுரை முத்து மனைவி..!
மேலும், கடந்த 2006ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக கலக்கிய ஜி.வி.பிரகாஷ் விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்தார்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் ஆதிக்கம் செலுத்தி வருடிகிறார். இவருக்கு படிப்படியாக நடிப்பின் மீது ஆர்வம் வந்த நிலையில், படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார், இன்னொரு பக்கம் இசையமைத்தும் வரும் இவர், கடந்த 2013ம் ஆண்டு பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
மேலும் படிக்க: தம்பி ஓடாத நில்லு.. மகன்களுடன் கொஞ்சி விளையாடிய நயன்..!(Video)
இந்நிலையில், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் திருமணம் செய்துகொண்டு 11 ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர். அவர்கள் பிரிவதாக நேற்றில் இருந்தே செய்தி பரவி வந்தது. தற்போது அதிகாரபூர்வமாக ஜி.வி.பிரகாஷ் சைந்தவி இருவரும் விவாகரத்தை அறிவித்து இருந்தனர்.
Music Composer/Actor #GVPrakash has announced that he and his wife Singer #Saindhavi are getting a divorce.. https://t.co/xc71mqPRRf
— Ramesh Bala (@rameshlaus) May 13, 2024
— Saindhavi (@singersaindhavi) May 13, 2024
இந்நிலையில், இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பூதாகரமாக வெடித்து பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இது குறித்து, பலர் பிரிவுக்கு என்ன காரணம் என்று பலவிதமான கருத்துக்களை கூறியும் இணையதளத்தில் செய்திகளை வெளியிட்டும் வந்தனர். இதை அறிந்த ஜிவி பிரகாஷ் போலியான தகவல்களை பகிர்ந்து வருபவர்களை கண்டித்து ஒரு அறிக்கை பதிவினை எக்ஸ்ஸ்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார். இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு நண்பர்கள் உறவினர்கள் போன்றவர்களிடம் கலந்து ஆலோசித்து தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். சில விமர்சனங்கள் காயப்படுத்துகிறது என்று கூறவே இந்த பதிவு என்று ஜிபி பிரகாஷ் அந்த பதிவினை பகிர்ந்து இருந்தார்.
— G.V.Prakash Kumar (@gvprakash) May 15, 2024
மேலும் படிக்க: அடேங்கப்பா.. சொந்த பணத்தில் வீடு கட்டி கொடுக்கும் விஜய்.. அடுத்த மாவட்டம் கோயம்புத்தூர் தானாம்..!
தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால் பிரபலங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து YOUTUBEபில் பேசி வரும் சர்ச்சை பிரபலம் பயில்வான் ரங்கநாதன் ஜிவி பிரகாஷ் குமார் சைந்தவி பிரிவுக்கு என்ன காரணம் என்று பலரும் யோசித்து வரும் நிலையில், தற்போது பூதாகரமாக அவர் கூறி ஒரு விசயம் பலரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதாவது, மனைவி சைந்தவி ஜிவி பிரகாஷ் தங்கை பாவனிஸ்ரீயையும் அவரது அப்பாவையும் தனித்தனியாக அனுப்பி வைக்கவும், நாம் தனியாக வாழலாம் என்று கூறியிருக்கிறார். அதை ஜிவி பிரகாஷ் கேட்கவில்லை என்பதால் சைந்தவி பிரிந்து விட்டதாக ஒரு பக்கம் சொல்கிறார்கள்.
மேலும் படிக்க: ஷகிலா கூறிய அந்த வார்த்தை.. அவசர அவசரமாக நிச்சயதார்த்தத்தை முடித்த பயில்வான்..!
இன்னொரு பக்கம் நடிகைகளுடன் ஜிவி பிரகாஷ் உறவு வைத்துக் கொண்டார் என்றும், த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நடிகை மனிஷா யாதவுக்கு முத்தம் கொடுக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டது. அதற்கு, மனுஷன் ரி டேக் என்று கூறி பல டேக் வாங்கியுள்ளார். மனிஷா யாதவ் உதட்டில் பஜக்.. பஜக்.. கென்று முத்தம் கொடுத்தது தான் காரணம். மனிஷா யாதவ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது என்று பய்லவான் ரங்கநாதன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.