சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும்.
தற்போது, வாரிசு படம் வெளியாகி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில், நடிகர் விஜய் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தக் கருத்து பூதாகரமான நிலையில், அரசியல் பிரபலங்கள் கூட இது பற்றி கருத்துக்களை சொல்ல ஆரம்பித்து விட்டனர். இருப்பினும், விஜய் தரப்பில் இருந்து எந்த கருத்தும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், இது தொடர்பாக பேசிய பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது:- எப்போதுமே நான்தான் அடுத்த மக்கள் திலகம், அடுத்த நடிகர் திலகம் அடுத்த உலக நாயகன் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்கள். அப்படித்தான் சூப்பர் ஸ்டார் பட்டமும் அது ரஜினி ஒருவருக்கு தான் பொருந்தும். அந்த பட்டத்தையே இப்போது திருடுகிறார்கள். எத திருடனும்னு ஒரு விவஸ்தை இல்லையா..?
தமிழ் சினிமாவை பொறுத்தவரை அடுத்த எம்ஜிஆர், சிவாஜி, கமல் என்ற பேச்சுக்கு வந்ததே. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பட்டத்தின் மீது மட்டும் எப்போதுமே ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. பாபா பட தோல்விக்கு பிறகு ரஜினிகாந்த் இனி நடிக்கப்போவதில்லை. கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று சினிமா வட்டாரங்களிலேயே வதந்தி எழுந்தது.
சூப்பர் ஸ்டார் சினிமாவில் ஆக்டிவாக இருக்கும் இந்த நேரத்தில் கூட, விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கின்றனர். என்னதான் விஜய்யின் படங்கள் ஹிட் கொடுத்தாலும், கோடிக்கணக்கில் வசூல் செய்தாலும், ரஜினிகாந்த் ஆக்டிவாக இருக்கும் காலகட்டத்தில் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் என்பதெல்லாம் தேவையில்லாத பேச்சு தான்.
ஆனால் இது போன்ற விஷயங்கள் விஜய்க்கு எதிரான சர்ச்சை கருத்துகளாக மாறுவதற்கு காரணம் இதுவரை விஜய், இந்தப் பிரச்சினையைப் பற்றி வாய் திறக்காமல் இருப்பதுதான். அவர் மட்டும் ஏதாவது ஒரு மேடையில் சென்னை சூப்பர் ஸ்டார் என்று கூற வேண்டாம், ரஜினி தான் என்றும் சூப்பர் ஸ்டார் என்று ஏதாவது ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்தால் எந்த சர்ச்சையும் அவருக்கு வராது, என தெரிவித்துள்ளார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.