விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே இந்த அளவுக்கு டிரெண்டிங்கான தொகுப்பாளினியே இல்லை என்று கூட கூறலாம். அந்தளவுக்கு விஜய் தொலைக்காட்சியின் செட் பிராபர்ட்டியாக திகழ்பவர் பிரியங்கா என்று அவரை கிண்டல் செய்பவர்களும் உண்டு. அவரது குரல் கணீர் என்று இருப்பதால் அவருடன் இணைந்து யார் தொகுத்து வழங்கினாலும் அவர்களது குரல் எப்போதும் மங்கியே ஒலிக்கும்.
கடந்த ஆண்டு “குக் வித் கோமாளி சீசன் 5” நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டபோதே மணிமேகலைக்கும் பிரியங்காவுக்கும் இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மணிமேகலை அந்நிகழ்ச்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
பிரியங்கா 2016 ஆம் ஆண்டு பிரவீன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில் 2022 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றன்ர். இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி பிரியங்கா வசி என்பவரை திருமணம் செய்துகொண்டார். பிரியங்காவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆன நிலையில் மிகவும் வயதானவரை திருமணம் செய்துகொண்டார் என சர்ச்சைகளும் எழுந்தன.
இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன், “பிரியங்கா திருமணம் மட்டும் அல்லாது அவருடன் குழந்தையும் பெற்றுக்கொள்ள விரும்புவதாக கூறுகிறார். குழந்தை பெற்றுக்கொள்வதற்காகத்தான் இந்த அவசர திருமணம் என்று வைத்துக்கொண்டால் அவர் ஏறகனவே கர்ப்பமாக இருக்கிறாரா என்ற கேள்வி வருகிறது. ஒரு வேளை அவர் கர்ப்பமாகிவிட்ட காரணத்தினால்தான் அவசர அவசரமாக தன்னுடைய காதலரை திருமணம் செய்துகொண்டாரா? என தெரியவில்லை. அதை நீங்கள்தான் யோசிக்க வேண்டும்” என்று பகீர் கிளப்பும் வகையில் பேசியுள்ளார்.
பிரியங்கா திடீரென திருமணம் செய்துகொண்டது ஆச்சரியத்தை கிளப்பியுள்ள நிலையில் பயில்வான் ரங்கநாதனின் கேள்வி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
வெற்றி இயக்குனர் கோலிவுட்டில் 1990களில் இருந்து பல திரைப்படங்களை இயக்கி வருகிறார் சுந்தர் சி. கிட்டத்தட்ட அவர் இயக்கிய எந்த…
This website uses cookies.