நடிகர் பாக்யராஜ், தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர். தமிழ் சினிமாவை வேறு திசை நோக்கி பயணிக்க முக்கிய காரணமாக அமைந்தவர்.
இவர் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பணிபுரிந்து போதே, சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் போன்ற படத்திற்கு கதை எழுதினார். இவர் பிரவீணா என்ற நடிகையை முதலில் திருமணம் செய்தார். காதல் திருமணம் என்பதால் நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு பிரவீணா உயிரிழந்தார்.
இவர் மறைவை தாங்க முடியாமல் பாக்யராஜ் துவண்டிருந்த போதுதான், நடிகை பூர்ணிமா காதலை சொன்னார். பாக்யராஜ் முதலில் தடுமாற, குடும்பம் ஒன்று கூடி பேசி திருமணத்தை முடித்தனர்.
சரண்யா, சாந்தனு என்ற இரு குழந்தைகளை பெற்றெடுத்த பின், சினிமா கேரியரில் அதிகம் கவனம் செலுத்தினார் பாக்யராஜ். பாரிஜாதம் என்ற படத்தில் சரண்யா கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பின் இவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. சாந்தனு நடிகர், டான்சராக உள்ளார்.
இப்படியிருக்கையில், திடீரென திருமணமே செய்து கொள்ளாமல் இருக்கும் சரண்யா தனக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாக கூறிய செய்தி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.
இது குறித்து பேசிய பாக்யராஜ், வீட்டை விட்டு வெளியேறிய மகள் சரண்யா, ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். சாதி, இனம், பணத்தை தாண்டி வேறு ஒரு பிரச்சனையால் அந்த உறவு முறிந்தது.
மகள் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிந்தேன். பின்னர் பூர்ணிமாவை மகளை பார்க்க அனுமதித்தேன். தற்போது பேரனுடன் தான் என் வாழ்க்கையை கழிக்கிறேன். அவன் இல்லாமல் நான் இல்லை. நான் இல்லாமல் அவன் இல்லை என கூறியிருக்கிறார்.
சரண்யா திருமணம் செய்யாமல் இருக்கிறார் என்று அண்மையில் பேசப்பட்ட போது கூட இந்த விஷயத்தை கூறாமல் இருந்த பாக்யராஜ் குடும்பம் தற்போது இதை வெளியில் கூறியுள்ளனர்.ஆனால் சரண்யாவின் கணவர் யார் என்று இதுவரை கூறவில்லை. எதனால் பிரிந்தார்கள், ஏன் காதல் திருமணம் என்ற ரகசியம் காக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று…
நடிகை அமலாபால் மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து விஜய்,…
டாப் நடிகர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆமிர்கான். இவர் தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் உதவி இயக்குனராகவும் தனது…
எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…
தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும்…
பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…
This website uses cookies.