நடிகர் பாக்யராஜ், தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர். தமிழ் சினிமாவை வேறு திசை நோக்கி பயணிக்க முக்கிய காரணமாக அமைந்தவர்.
இவர் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பணிபுரிந்து போதே, சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் போன்ற படத்திற்கு கதை எழுதினார். இவர் பிரவீணா என்ற நடிகையை முதலில் திருமணம் செய்தார். காதல் திருமணம் என்பதால் நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு பிரவீணா உயிரிழந்தார்.
இவர் மறைவை தாங்க முடியாமல் பாக்யராஜ் துவண்டிருந்த போதுதான், நடிகை பூர்ணிமா காதலை சொன்னார். பாக்யராஜ் முதலில் தடுமாற, குடும்பம் ஒன்று கூடி பேசி திருமணத்தை முடித்தனர்.
சரண்யா, சாந்தனு என்ற இரு குழந்தைகளை பெற்றெடுத்த பின், சினிமா கேரியரில் அதிகம் கவனம் செலுத்தினார் பாக்யராஜ். பாரிஜாதம் என்ற படத்தில் சரண்யா கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பின் இவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. சாந்தனு நடிகர், டான்சராக உள்ளார்.
இப்படியிருக்கையில், திடீரென திருமணமே செய்து கொள்ளாமல் இருக்கும் சரண்யா தனக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாக கூறிய செய்தி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.
இது குறித்து பேசிய பாக்யராஜ், வீட்டை விட்டு வெளியேறிய மகள் சரண்யா, ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். சாதி, இனம், பணத்தை தாண்டி வேறு ஒரு பிரச்சனையால் அந்த உறவு முறிந்தது.
மகள் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிந்தேன். பின்னர் பூர்ணிமாவை மகளை பார்க்க அனுமதித்தேன். தற்போது பேரனுடன் தான் என் வாழ்க்கையை கழிக்கிறேன். அவன் இல்லாமல் நான் இல்லை. நான் இல்லாமல் அவன் இல்லை என கூறியிருக்கிறார்.
சரண்யா திருமணம் செய்யாமல் இருக்கிறார் என்று அண்மையில் பேசப்பட்ட போது கூட இந்த விஷயத்தை கூறாமல் இருந்த பாக்யராஜ் குடும்பம் தற்போது இதை வெளியில் கூறியுள்ளனர்.ஆனால் சரண்யாவின் கணவர் யார் என்று இதுவரை கூறவில்லை. எதனால் பிரிந்தார்கள், ஏன் காதல் திருமணம் என்ற ரகசியம் காக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
எம்ஜிஆ-ரின் கருப்பு கண்ணாடி ரகசியம் தமிழ் சினிமாவின் நடிகர்,இயக்குனர் என பல திறமைகளை கொண்டிருப்பவர் பார்த்திபன்,தற்போது சமீப காலமாக சோசியல்…
This website uses cookies.