தமிழ் சினிமாவில் திறமை இருந்தும் மிகச்சிறந்த நடிகராக ஒரு சில ஹிட் படங்களில் நடித்து பின்னர் புது புது நடிகர்களின் வரவாலும். வாரிசு நடிகர்களின் ஆதிக்கத்தாலும் சினிமாவை விட்டு அட்ரஸே இல்லாமல் போனவர்கள் பல பேர் உண்டு. அந்தவரிசையில் இருப்பவர் தான் நடிகர் பரத்.
இவர் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்தார். தமிழில் 2003ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு செல்லமே, காதல், பிப்ரவரி 14, எம் மகன், வெயில், பழனி, நேபாளி, கோ, ஐந்து ஐந்து ஐந்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் ஹிட் ஹீரோவாக புகழ் பெற்ற பரத் பின்னர் அடுத்தடுத்த பட தோல்வியால் மார்க்கெட் இழந்தது சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்து வந்தார். அதன் பின்னர் ஜெஸ்லி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 2018 இல் இரட்டை மகன்கள் பிறந்தனர். கடைசியாக பரத் ” love” என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஹீரோ வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதன் பின்னர், நெகட்டிவ் ரோல்கள் போன்றவற்றிலும் நடிக்க தொடங்கிவிட்டார். இந்த நிலையில், பரத் அடுத்து இயக்குனர் முத்தையாவின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் வில்லனாக நடிக்கிறாராம். ஒரு காலத்தில், முக்கிய ஹீரோவாக இருந்த விஷாலுக்கு கூட வில்லனாக நடித்தவர். இப்போது, இப்படி இறங்கிவிட்டார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.