ரேவதியை நம்ப வைத்து ஏமாற்றிய பாரதிராஜா.. ஒருநாள் முழுக்க கதறி அழுத சம்பவம்..!

80ஸ்-களில் நடிகை ரேவதி இளைஞர்கள் மனதில் கனவுக்கன்னியாக இடம்பிடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை ரேவதி.

மண்வாசனை, தேவர் மகன், மௌனராகம், புதுமை பெண் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளிவந்த நவரசா ஆந்தாலஜி சீரிஸில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் ரேவதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த காலத்தில் இருந்த பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து வந்த நடிகை ரேவதி. தன்னுடைய கலக்கலான திரைப்படங்களை கொடுத்து வந்த நிலையில், மலையாள இயக்குனரான சுரேஷ் சந்திர மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு, 2013 ஆம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர்.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிகை ரேவதி நடிப்பால் அசத்தியிருக்கிறார். இந்நிலையில், முதல் படமான மண்வாசனையில் இவரை அறிமுகப்படுத்தி வைத்த இயக்குனர் பாரதிராஜாவுக்கு இடையே பல சலசலப்புகள் நடந்துள்ளது.

அதில், பாரதிராஜா சொன்னபடி பாண்டியன் உண்மையாகவே ரேவதியின் கண்ணத்தில் அறைந்தார் என்றும், இது மிகப்பெரிய பேசும் பொருளாக அந்த சமயத்தில் பார்க்கப்பட்டது.

இதனிடையே, மற்றும் ஒரு சம்பவம் ஒரு நாள் முழுக்க ரேவதியை அழ வைத்து வேடிக்கை பார்த்து உள்ளாராம் பாரதிராஜா. பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடலின் ஒரு காட்சியில் குளிப்பது போல் காட்சி அமைக்க பட குழு திட்டமிட்டு இருந்த நிலையில், இதற்கு பாரதிராஜா ரேவதியிடம் கிராமத்து பெண்களை போல் ரவிக்கை அணியாமல் மார்புவரை சேலையை கட்டிக்கொண்டு குளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தாராம்.

ஆனால், அதற்கு ரேவதி அப்படியெல்லாம் முடியாது என்று அழுது கொண்டு ஒத்த காலில் நின்றதாகவும், இதனால், சிறிது நேரம் படப்பிடிப்பில் தடை ஏற்பட்டதாகவும், பின்னர் பாரதிராஜா தனியாக இல்லாமல் சில பெண்களை கூட்டு சேர்த்து அவர்களுடன் சேர்த்து குளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனால் ரேவதி அரை மனதோடு நடிக்க ஒப்புக்கொண்டு விட்டாராம். ரேவதி தனியாக இல்லாமல் கூட்டு, சேர்ந்து குளித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் பாரதிராஜா அந்த காட்சியை ஒளிப்பதிவு செய்துவிட்டு பின்னர் படத்தை பார்க்கும் போது தான் ரேவதிக்கு விஷயமே தெரிய வந்ததாம். அதில், ரேவதி மட்டும் தனியாக படம் பிடித்துள்ளார் பாரதிராஜா. இதனைப் பார்த்த ரேவதி பாரதிராஜா என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் என பேட்டி ஒன்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

7 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

8 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

9 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

10 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

11 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

12 hours ago

This website uses cookies.