சினிமா / TV

பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட காதலி – 5 முறை தற்கொலை முயற்சி – சோகக்கதை கூறி அழுத சத்யா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்திலிருந்து மக்களின் பெருவாரியான வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதிலிருந்து விலகியதை அடுத்து இந்த நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

காரணம் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சி தொகுப்பாளராக நியமிக்கப்பட்டது தான். பிரமாண்டமாக நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சி நாளுக்கு நாள் சண்டை , போட்டி, பொறாமை, கலாட்டா , பிரச்சனை என சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது .

இந்த 8வது சீசனில் இருந்து இதுவரை ரவீந்தர் , அர்னவ், தர்ஷா குப்தா , ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதை டாஸ்க் நடைபெற்றது. அப்போது ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்கள்து வாழ்க்கையில் நடந்த மிக மோசமான அனுபவங்களை குறித்து மனம் விட்டு பேசினார்கள்.

அப்போது பேசிய சத்யாவின் கதை கேட்டு எல்லோருக்குமே கண்கலங்கி விட்டார்கள். காரணம் சத்யாவின் கதை அவ்வளவு சோகம் நிறைந்ததாக இருந்தது .

அவர் கூறிய அவர் கூறியதாவது, நான் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பையன் தான். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய பெற்றோர் ஒருவரை ஒருவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

அடுத்து நான் என்னுடைய பாட்டி வீட்டில் வளர்ந்தேன். ஆனால் என்னுடைய பாட்டிக்கு வயது ஆனதால் என்னை அவரால் பார்த்துக் கொள்ள முடியவில்லை.

எனவே என்னை போரிங் ஸ்கூலில் சேர்த்தார்கள். அங்கு ஒரு பெண் மீது காதல் விழுந்தேன். அந்த அந்த காதல் கல்லூரி சென்ற போதும் தொடர்ந்தது.

கல்லூரி சென்ற போதும் தொடர்ந்தது அந்த பெண் வீட்டில் விஷயம் தெரிய வர அவரை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள் .

அப்போது திடீரென ஒரு போன் கால் எனக்கு வந்தது. நான் எதிர்பார்க்காத போன் கால் அது…அவள் இறந்துவிட்டால் என்று எனக்கு சொன்னார்கள்.

என்னுடைய முதல் காதலி என்னிடம் அனுமதி வாங்கிவிட்டு தான் ஒரு இடத்திற்கு சென்றால். ஆனால், அங்கு அவருக்கு நடந்ததோ துரதிஷ்டமான சம்பவம்.

அவளை சில பேர் பாலியல் பலாத்காரம் செய்து ஒரு ரயில்வே டிராக்கல் தூக்கிப் போட்டு விட்டார்கள். அந்த பிரிவை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

அதிலிருந்து என்னால் வெளியில் வரவும் முடியவில்லை. என் காதலியை நினைத்து நினைத்து நான் கிட்டத்தட்ட ஐந்து முறைக்கு தற்கொலை முயற்சி செய்திருக்கிறேன்.

அது எவ்வளவு பெரிய கோழைத்தனம் என்று பின்னால் தான் எனக்கு தெரிய வந்தது. ஒரு கட்டத்தில் பெற்றோர்கள் காதலி என எல்லோருமே என்னை விட்டு பிரிந்து சென்றதால் என்னால் அதிலிருந்து எப்படி வெளியில் வந்து வாழ்வது என்று கேள்வியே மிகப்பெரிய கேள்வியாக இருந்தது.

அதனால் நான் போதைக்கு அடிமையாகி இருந்தேன். அப்போது தான் எனக்கு சினிமா மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது .

அதன் பிறகு எனக்கு இன்னொரு காதல் வந்தது. அவர்தான் என் மனைவி ரம்யா. மேலும் பேசிய அவர் பெற்றோர்கள் சாதாரணமாக ஒருவரை ஒருவர் மனக்கசப்பு என கூறி பிரிந்து விட்டுப் போய் விடலாம் .

ஆனால் அவர்களின் குழந்தையின் மனநிலை பற்றி தயவு செய்து கொஞ்சம் ஆவது யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என சத்யா மிகுந்த வருத்தத்தோடு அந்த பேட்டியில் பேசி இருந்தார்.

சத்யாவின் மனைவியான ரம்யா முன்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தது குறிப்பிடுத்தக்கது.

சத்யாவின் இந்த சோக கதை ஒட்டுமொத்த மக்களையும் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

Anitha

Recent Posts

என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!

மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…

1 hour ago

அட செம.!கோவையில் சர்வேதச கிரிக்கெட் மைதானம்…ரசிகர்கள் குஷி.!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…

2 hours ago

ஜெயிலுக்கு போக ரெடியா இருங்க…ஆபாச வீடியோ லீக்..நடிகை அட்டாக்.!

வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…

3 hours ago

3 நாளில் விவாகரத்து.. 19 வயது மகன் செய்த காரியம்.. ஆடு மேய்த்தபோது திடுக்கிடும் சம்பவம்!

விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…

3 hours ago

தீராத நோய்…வெளியே சொல்ல பயம்..பிரபல நடிகை வருத்தம்.!

காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…

4 hours ago

தண்ணீர் யாருக்கு காட்ட வேண்டும்? விஜய்க்கு அண்ணாமலை பதிலடி!

காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…

4 hours ago