பிக் பாஸில் சிவகார்த்திகேயன் அணிந்த தேசியக் கொடி மறைக்கப்பட்டது ஏன்? காரணம் இதுதான்!
Author: Udayachandran RadhaKrishnan26 அக்டோபர் 2024, 5:13 மணி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பங்கேற்றது நிகழ்ச்சி தற்போது சர்ச்சையாகியுள்ளது.
விறுவிறுப்பாக நடந்து பிக் பாஸ் சீசன் 8வது நிகழ்ச்சயை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இந்த வாரம் யார் எலிமினேட் என்பதை பார்க்க மக்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு நேற்று சிவகார்த்திகேயன் வந்திருந்தார். தனது அமரன் படத்தின் ப்ரோமோஷனுக்காக அவர் வந்திருந்தார். ஏற்கனவே சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருந்து தான் நடிகராக மாறினார் என்பதால் அவருக்கு இது தாய் வீடு போன்றது.
உள்ளே வந்த அவர் சக போட்டியாளர்களுடன் அமர்ந்து அமரன் பட ட்ரெய்லரை போட்டு காண்பித்தார். இது குறித்து ப்ரோமோ வெளியானது.
அதே சமயம் எபிசோடில் அவர் அணிந்திருந்த தேசியக் கொடி பிளர் செய்யப்பட்டது. இது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: த.வெ.க மாநாட்டை வீழ்த்த களமிறங்கும் ரஜினி.. சம்பவம் செய்யும் ரசிகர்கள்!
ஆனால் இதற்கு காரணம் என்ன என்பது விஜய் டிவி விளக்கம் அளித்துள்ளது. அதாவது வழக்கமாக இந்திய சட்டப்படி தேசிய கொடி செவ்வக வடிவத்தில் தான் அணிய வேண்டும்.
ஆனால் வட்டமாமக தேசிய கொடியை சிவகார்த்திகயேன் உட்பட அங்கிருந்த போட்டியாளர்களும் அணிந்திருந்ததால் அது பிளர் செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0