பிக் பாஸ் டைட்டில் வின்னரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் கமல் தொகுத்து வழங்கி வருவதைப் போலவே தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். அண்மையில் தான் தெலுங்கு சீசன் 7 முடிந்தது. இதில் தமிழில் பிரபலமான கிரண், ஷகீலா உட்பட்ட 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். திரையுலக பிரபலங்கள் இருந்தாலும், யூடியூப் மூலம் பிரபலமான பல்லவி பிரசாத் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.
விவசாயம் தொடர்பான தகவல்களை தனது யூடியூப் பக்கத்தின் மூலம் பகிர்ந்து வருவதன் மூலம் பிரபலமான இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு போட்டியாக விஜய் டிவி சீரியல் நடிகை தேஜஸ்வினியின் கணவர் அமர்தீப் திகழ்ந்தார்.
இந்த நிலையில் அமர்தீப் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி கார் மூலம் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, பல்லவி பிரசாந்தின் ரசிகர்கள் சிலர் அமர்தீப் காரை மறித்து அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு பிரபலங்களும் இந்த செயலுக்கு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இது தொடர்பான புகாரில் பல்லவி பிரசாத் மற்றும் அவரது ரசிகர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், பல்லவி பிரசாத்தை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். அவரை நேற்று டிசம்பர் 20 கைது செய்யப்பட்டார். அவரிடம் ஜூபிளி ஹில்ஸ் போலீசார் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
This website uses cookies.