சினிமா / TV

நான் செய்த பெரிய தவறு… மனுஷன் எவ்வளவு வேதனை பட்டிருந்தால் இப்படி சொல்லுவாரு!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல வில்லன் நடிகராக இருந்து வந்தவர் தான் ரகுவரன் இவர் பல்வேறு திரைப்படங்களில் மிரட்டலான வில்லன் வேடம் ஏற்றும் அடித்து அனைவரது கவனத்தை ஈர்த்து தவிர்க்க முடியாத வில்லன் நடிகராக தமிழ் சினிமாவில் இடத்தை பிடித்தார்.

முதன் முதலில் ஹீரோவாக திரைப்படங்களின் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு எதிர் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். ஹீரோவாக நடித்ததை காட்டிலும் வில்லன் வேடம் இவருக்கு பக்காவாக பொருந்த ஆரம்பிக்க பின்னாளில் அவர் வில்லன் நடிகராகவே மாறிவிட்டார் .

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பாட்ஷா திரைப்படம் மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த முதல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் இவரது வில்லத்தனமான நடிப்பு எல்லோருது கவனத்தையும் கவர்ந்தது .

இந்த நிலையில் பிரபலமான நடிகராக நட்சத்திர அந்தஸ்தில் இருந்து வந்த நடிகர் ரகுவரன் நடிகை ரோகிணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

இதனிடையே ரகுவரன் கடந்த 2008 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாக காலமாகிவிட்டார். இந்த நிலையில் ரகுவரன் பல வருடங்களுக்கு முன் தான் உயிரோடு இருக்கும்போது பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த நேர்காணலில் நடிகர் ரகுவரனிடம் நீங்க வாழ்க்கையில் பண்ண மிகப்பெரிய தப்பு அப்படி என்றால் எது நினைக்கிறீங்க? என கேள்வி எழுப்பியதற்கு… நான் நடிகன் ஆனது தான் மிகப்பெரிய தவறு என கூறினார். என்ன காரணம் என கேள்வி எழுப்பியதற்கு ஏன்னா இதைவிட நல்ல சந்தோஷமா ஒரு சின்ன வீடு கட்டிக்கிட்டு… ஒரு நிலத்தில் பயிரிட்டு…. …

விளையிற பயிறு முதுகுல சுமந்துட்டு போய் மார்க்கெட்ல போட்டு. அதன் மூலம் கிடைக்கிற சாப்பாட்டுல கஞ்சியோ கூழோ குடிச்சிட்டு நிம்மதியா படுத்து துங்கி ஆண்டவனே இன்னைக்கு மழை வரணும் என வேண்டிக் கொண்டு ஆடு மாடு கோழி இது எல்லாத்தையும் வச்சு வளர்த்துட்டு அதுங்களுக்கு சாப்பாடு கொடுத்துட்டு நமக்கு உதவிக்குனு ஒருத்தர் இருந்தா அந்த வாழ்க்கையே வேற தான் .

இதையும் படியுங்கள்: யாரை கேட்டு நீ இங்க வந்த…? பிக்பாஸ் 8 ல் மகள் – கடிந்து கொண்ட விஜய் சேதுபதி – வைரல் வீடியோ!

வாழ்க்கை நம்ம வாழ்வதெல்லாம் வாழ்க்கையே கிடையாது என வாழ்க்கை பற்றிய தெளிவான புரிதலை ரகுவரன் அந்த பேட்டியில் பேசியிருப்பார். இந்த வீடியோ தற்போதைய இணையத்தில் வைரலாக மனுஷன் எவ்வளவு வேதனைப்பட்டு இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியோடு வாழ நினைத்திருந்தால் இவ்வளவு. வருத்தத்தோடு ஆதங்கப்பட்டு பேசி இருப்பார் என ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Anitha

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

3 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

3 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

4 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

5 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

5 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

6 hours ago

This website uses cookies.