தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். என்னதான் இவர்கள் இருவரும் நண்பர்கள் என சொல்லப்பட்டாலும் ரசிகர்கள் இவர்களை போட்டி நடிகர்களாகவே பார்க்கின்றனர். இருவரின் திரைப்பயணமும் ஒன்றாகவே அமைந்தது மட்டுமல்லாமல் இருவரும் சரிசமமான ரசிகர்களை கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் பல வருடங்கள் கழித்து மீண்டும் நேருக்கு நேர் மோதவுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜில்லா மற்றும் வீரம் ஆகிய படங்கள் ஒரே நேரத்தில் வெளியானது.
அதன் பிறகு தற்போது விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் அடுத்தாண்டு பொங்கலுக்கு ஒன்றாக வெளியாகவுள்ளது. எனவே யார் படம் அதிக வசூலை ஈட்டும் என இவர்களின் ரசிகர்கள் தற்போதே மோதலை துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் அஜித்தின் துணிவு படத்தை விட வாரிசு தான் அதிக வசூலை ஈட்டும் எனவும், அஜித்தால் விஜய்யை நெருங்கமுடியாது எனவும் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கூறியதாவது ,ஜில்லா மற்றும் வீரம் திரைப்படங்கள் வெளியானபோது இருவரும் சமபலத்தில் இருந்தனர். ஆனால் அதன் பின் விஜய் அதிக கமர்ஷியல் படங்களை கொடுத்து வசூல் சக்ரவர்த்தியாக வலம் வருகின்றார். மேலும் கடைசியாக வெளியான இவர்கள் படங்களை எடுத்துப்பார்த்தால் வலிமை படத்தை விட பல மடங்கு பீஸ்ட் திரைப்படம் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் அயல்நாட்டில் கூட வாரிசு படம் தான் அதிக தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளது. மேலும் துணிவு திரைப்படத்தின் வியாபாரம் மந்தமான நிலையில் தான் உள்ளது. எனவே விஜய்யின் வாரிசு திரைப்படம் தான் அஜித்தின் துணிவை விட அதிக வசூலை ஈட்டும் என கூறியுள்ளார் பிஸ்மி என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் ரகசிய தகவல் அடிப்படையில் போதை தடுப்பு போலீசார்…
தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கையை முன்னிட்டு, அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி…
விஜய்க்கு ஃபத்வா… விஜய் கடந்த மாதம் சென்னை ஒய் எம் சி ஏ பள்ளிவாசலில் பல இஸ்லாமியர்களுடன் ரமலான் நோன்பில்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட் வரலாற்றில் கவுண்ட்டர் வசனங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் கவுண்டமணி. சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு ஆயிரத்திற்கும்…
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி…
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் உறவினரும் போக்சோ வில் கைது செய்யப்பட்டு…
This website uses cookies.