தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். என்னதான் இவர்கள் இருவரும் நண்பர்கள் என சொல்லப்பட்டாலும் ரசிகர்கள் இவர்களை போட்டி நடிகர்களாகவே பார்க்கின்றனர். இருவரின் திரைப்பயணமும் ஒன்றாகவே அமைந்தது மட்டுமல்லாமல் இருவரும் சரிசமமான ரசிகர்களை கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் பல வருடங்கள் கழித்து மீண்டும் நேருக்கு நேர் மோதவுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜில்லா மற்றும் வீரம் ஆகிய படங்கள் ஒரே நேரத்தில் வெளியானது.
அதன் பிறகு தற்போது விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் அடுத்தாண்டு பொங்கலுக்கு ஒன்றாக வெளியாகவுள்ளது. எனவே யார் படம் அதிக வசூலை ஈட்டும் என இவர்களின் ரசிகர்கள் தற்போதே மோதலை துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் அஜித்தின் துணிவு படத்தை விட வாரிசு தான் அதிக வசூலை ஈட்டும் எனவும், அஜித்தால் விஜய்யை நெருங்கமுடியாது எனவும் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கூறியதாவது ,ஜில்லா மற்றும் வீரம் திரைப்படங்கள் வெளியானபோது இருவரும் சமபலத்தில் இருந்தனர். ஆனால் அதன் பின் விஜய் அதிக கமர்ஷியல் படங்களை கொடுத்து வசூல் சக்ரவர்த்தியாக வலம் வருகின்றார். மேலும் கடைசியாக வெளியான இவர்கள் படங்களை எடுத்துப்பார்த்தால் வலிமை படத்தை விட பல மடங்கு பீஸ்ட் திரைப்படம் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் அயல்நாட்டில் கூட வாரிசு படம் தான் அதிக தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளது. மேலும் துணிவு திரைப்படத்தின் வியாபாரம் மந்தமான நிலையில் தான் உள்ளது. எனவே விஜய்யின் வாரிசு திரைப்படம் தான் அஜித்தின் துணிவை விட அதிக வசூலை ஈட்டும் என கூறியுள்ளார் பிஸ்மி என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.