தமிழ் சினிமாவின் copycat இயக்குனர் என மோசமாக விமர்சிக்கப்பட்ட பிரபலம் ஆனவர் அட்லீ. இவரது இயக்கத்தில் வெளியான ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து வசூலில் பட்டயகிளப்பியிருந்தாலும் அது அத்தனை காப்பியடிக்கப்பட்ட படங்கள் என்பது மோசமாக விமர்சிக்கப்பட்டது.
ஆனாலும் அட்லீ துவண்டுவிடவில்லை, அவரின் மார்க்கெட்டும் குறைந்துபோகவில்லை. ஆம், தற்போது பாலிவுட்டின் கிங்காங் ஷாருக்கானை வைத்து அட்லீ ஜவான் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. முன்பதிவிற்கான டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகிறது. படத்தின் ப்ரோமோஷன்கள் படு பிசியாக நடைபெற்றது.
படம் நன்றாக ஓடவேண்டும் என வேண்டி ஷாருக்கான், நயன்தாரா திருப்திக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த விடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது இப்படியான நேரத்தில் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டரில்,
‘சனாதானம்னா என்ன? அந்த தர்மத்துல உங்களுக்கு உடன்பாடு இருக்கா?’ , ‘ஜவான் படத்தோட ரன்னிங் டைம் 2 hrs 50 minutes. இதை முழுசா பாத்துட்டு உயிரோட வீடு வந்த சேர முடியுமான்னு தலையை பிச்சிட்டு இருக்கேன். நீ வேற ஏன்டா புரியாத டாபிக்கை பத்தி கேள்வி கேக்கற?’ என சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டு திரைத்துறையினரின் கோபத்தை தூண்டியுள்ளார்.
இவர் ஏற்கனவே அட்லீயின் ராஜா ராணி, மெர்சல் உள்ளிட்ட படங்களை மோசமாக விமர்சித்திருந்தார். தற்ப்போது பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ஜவான் படம் வெளியாவதற்கு முன்னரே இப்படி விமர்சித்திருப்பது படத்தின் மீதான மக்களின் பார்வை குறைய வாய்ப்புள்ளது என திரையுறையினர் அச்சம் அடைந்துள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.