நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது.
இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அசோக் செல்வனுக்கு பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்டார். கீர்த்தி பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலியில் இயற்கை சார்ந்த முறையில் நடைபெற்ற இத்திருமணம் பலரது கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், திருமணம் ஆகிய பின்னர் இருவரும் இணைந்து ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் எஸ் ஜெயக்குமார் இயக்கத்தில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.
சமீபத்தில், நடந்த இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசுகையில், எனக்கு அதிகமாக இப்படத்தில் உதவிய அறிவுக்கு நன்றி, பொதுவாக எல்லா படங்களிலும் இசைக்கும் போது உதவி இயக்குனர்கள் பலர் இருப்பார்கள். ஆனால், இப்படத்தில் நான் அறிவு ஜெயக்குமார் மட்டுமே இருப்போம்.
கேரளாவில் நான் பாட்டுக்கு தண்ணி அடிச்சிட்டு ஜாலியா தான் கம்போஸ் செய்தேன். பின்னணி இசைக்கும் அப்படித்தான் தண்ணி அடிச்சிட்டு பண்ணேன். யாரும் என்னை தொந்தரவு செய்யவில்லை என்று வெளிப்படையாக இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தெரிவித்துள்ளார்.
முடிந்தவரை காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…
கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…
This website uses cookies.