பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் திரைப்படங்களில் வில்லனாக நடித்தாலும்,நிஜ வாழ்க்கையில் பலருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.கொரோனா கால கட்டத்தில் கூட பல மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி ஏழைகளின் கொடை வள்ளல் என்று அழைக்கப்பட்டார்.
இதையும் படியுங்க: நான் தான் அப்பாவா…பெற்ற குழந்தையை வைத்து நடிகர் ‘அப்பாஸ்’ செய்த அதிர்ச்சி செயல்..!
தற்போது பல படங்களில் நடித்து வரும் சோனு சூட் மோசடி வழக்கில் சிக்கியுள்ளதால் அவரை கைது செய்ய வேண்டும் என லூதியான நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
லூதியானவை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் கன்னா,மோஹித் சுக்லா என்பவர் மீது 10 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அதில் போலியான ரிஜிகா நாணயத்தில் என்னை முதலீடு செய்ய சொன்னதாக கூறியுள்ளார்.
இந்த வழக்கில் நடிகர் சோனு சூட்டிற்கு தொடர்புடையதாக கூறப்பட்டது.இதனால் விசாரணைக்கு வர,அவரை நீதிமன்றம் அழைத்தது.ஆனால் அவர் ஆஜராகாமல் இருந்ததால்,தற்போது லூதியான நீதிமன்றம் மும்பை அந்தேரியில் உள்ள ஓஷிவாரா காவல் நிலைய அதிகாரிக்கு சோனு சூட்டை கைது செய்யுமாறு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.அந்த அறிக்கையில் சோனு சூட்டிற்கு முறையாக சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் இருந்துள்ளார்,இதனால் அவரை 10-02-2025-க்கு முன் கைது செய்து நீதிமன்றம் முன் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மோசடி வழக்கில் சோனு சூட் உண்மையில் சம்மந்தப்பட்டுள்ளாரா என்பது வரும் 10-ஆம் தேதி விசாரணையில் தெரிய வரும்,இந்த தகவலை கேட்ட அவரது ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
This website uses cookies.