1993 ஆம் ஆண்டு இயக்குனர் சந்தான பாரதியின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மகாநதி
இந்த திரைப்படத்தில் தன் நண்பனால் ஏமாற்றப்பட்டு மகளை தொலைத்து விட்டு தேடும் தந்தையாக கமல்ஹாசன் நடிப்பில் அசத்தியிருப்பார்
இதே போன்றதொரு திரைப்படம் மலையாளத்தில் மகாநதி வெளிவருவதற்கு பத்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆம் அதுதான் உண்மை.
மலையாளத்தில் 1983 ஆம் ஆண்டு பிரேம் நசீர் நடிப்பில்
P. A. பாக்கர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ச்சாரம் பிரேம் நசீர் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அவருடைய மகள் ப்ரீத்தி.
அம்மா இல்லாத ப்ரீத்தி தனிமையை உணர்வதால் தவறான நட்பின் வழிக்கு தள்ளப்படுகிறார்.
ஒருநாள் எதிர்பாராத விதமாக அவர் காணாமல் போகிறார் பிரேம் நசீர் அவரை தேடவே அவர் பல நாட்களாக கல்லூரிக்கு வரவில்லை என தெரிய வருகிறது கடைசியில் மகளுடைய ஒரு தோழி மூலமாக அவருக்கு ஒரு தீவிரவாதி உடன் பழக்கம் இருந்ததையும் அவருடன் மும்பை சென்று விட்டார் என்பதையும் அறிந்து கொள்கிறார்
பிறகு தன்னுடைய மகளைத் தேடி மும்பைக்கு செல்கிறார் அங்கு பல இடங்களில் தேடியும் தன்மகள் கிடைக்காமல் சோர்வடைகிறார். ஒரு கடையில் வைக்கப்பட்டுள்ள ஒரு புத்தகத்தில் தன் மகளின் நிர்வாண புகைப்படம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். தன் மகள் சிவப்பு விளக்கு ஏரியாவில் இருப்பதை அறிந்து பிறகு அவரை எப்படி மீட்கிறார் என்பதே கதை.
இந்த மலையாள திரைப்படம் முழுக்க முழுக்க மகாநதி கதையை ஒத்திருக்கும். சில கதைகள் ஒன்றுக்கொன்று ஒரே மாதிரியாக தோன்றினாலும் கூட அதை ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்கும் விதம் வேறுபடுவதால் பார்ப்பதற்கு அவை சுவாரசியத்தை தருகிறது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.