கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரக்சித் ஷெட்டி.பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு நாய்க்கும் மனிதனுக்குமான அன்பை மையப்படுத்தி வெளிவந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சார்லி 777‘ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் அறிமுகமானவர்.
நடிகை ராஷ்மிகாவுக்கும் இவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் வரை சென்று கடைசி நேரத்தில் நின்று போனது சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருந்தாலும் தற்போது படங்களை கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இவரது நடிப்பில் ‛பேச்சுலர் பார்ட்டி’ என்கிற படம் வெளியானது. இந்தப் படத்தை இவரே தயாரித்தும் இருந்தார். அர்ஜுன் ராமு என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் ஏற்கனவே வெளியான நியாய எல்லிடே மற்றும் காலிமாத்து ஆகிய படங்களில் இடம் பெற்ற பாடல்களை தங்களது அனுமதி இல்லாமல் இந்த படத்தில் பயன்படுத்தி இருப்பதாக எம்.ஆர்.பி மியூசிக் என்கிற நிறுவனம் புகார் அளித்திருந்தது.
இதைத்தொடர்ந்து காப்பிரைட் உரிமை சட்டத்தின்படி பெங்களூரு போலீசார் இவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பள்ளிக்குச் செல்ல விரும்பாத நிலையில், போலியாக பாலியல் வன்கொடுமை புகார் அளித்த 12ம் வகுப்பு மாணவிக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.…
ரசிகர்களுக்கு கோபமா இல்லை மகிழ்ச்சியா தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குனர்,தயாரிப்பாளர் என பல வித்தைகளை கையில் வைத்திருப்பவர்கள் மிகவும் குறைவு,ஆனால் தனுஷ்…
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமான குட்…
உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலையை நோக்கி எழுப்பிய கேள்வி, திமுக ஐடி விங்கால் திருப்பி விடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை:…
கோவையைச் சேர்ந்த 21 வயது மாணவி தனது வீட்டின் அருகே உள்ள அழகுகலை நிலையத்திற்கு பயிற்சி எடுத்து வருகிறார். அவர்…
This website uses cookies.