மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 23ம் தேதி வெளியான திரைப்படம் தான் வாழை. முன்னதாக மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் மூலம் வாழ்க்கையின் வலிகளையும் வேதனைகளையும் எதார்த்தத்தையும் வெளிப்படுத்தி தமிழ்த்திரையுலகில் சிறந்த படைப்பாளியாக பெயரெடுத்தார்.
கடைசியாக அவரது இயக்கத்தில் வெளிவந்து தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் “வாழை”.இந்த திரைப்படம் மாரி செல்வராஜ் தனது சிறு வயது வாழ்க்கையை மையப்படுத்தி…வலிகளையும் வேதனைகளையும் உள்ளடக்கி எடுத்து இருக்கிறார். இந்த திரைப்படத்தை பார்த்த எல்லோருமே கண் கலங்கி மன வேதனைடன் ரிவியூ கொடுத்ததை நம்மால் பார்க்க முடிகிறது
இப்படி வசூல் ரீதியாகும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று இருக்கும் வாழை திரைப்படம் தற்போது மிகப்பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கிருக்கிறது. ஆம் பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா தாய்லாந்தில் லைவ் ஷோ ஒன்றில் வாழை படத்தை குறித்து மிகவும் கொச்சையாக பேசியிருகிறார்.
அவர் பேசியதாவது, ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வார்கள். அதனை பலரும் கண்டு களிப்பார்கள். அப்படித்தான் வாழை படத்தில் வரும் டீச்சர் பூங்கொடி மாணவன் சிவனைந்தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கிறது. எனவே இது ஒரு ஆபாசம் படம் போல் இருப்பதாக அவர் பகிரங்கமாக தன்னுடைய விமர்சனத்தை வைத்திருக்கிறார். அவரின் இந்த பேச்சு சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.