இனிமேல் இங்கு இருந்தால் நமக்கு அசிங்கம்னு வெளிய வந்துட்டேன்: கமல் படத்திலிருந்து விலகியது ஏன்? இயக்குனர் சேரன் விளக்கம்..!

இயக்குனர் சந்தான பாரதி இயக்கத்தில் 1994ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் மகாநதி. இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், சுகன்யா, ஹனிஃபா, பூர்ணம் விஸ்வநாதன், எஸ் ஏ லட்சிமி, ஷோபனா விக்னேஷ் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் உதவி இயக்குனராக இருந்தவர் தான் நடிகர் சேரன்.

நடிகர் சேரன் கமல்ஹாசன் மீது கொண்ட அதிக அன்பின் காரணமாக ஒருமுறையாவது அவருடன் படத்தில் வேலை பார்த்து விட வேண்டும் என்று தயாரிப்பாளர் பி தேனப்பன் மூலமாக சந்தான பாரதியின் மகாநதி திரைப்படத்தில் வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. 60 நாட்கள் நடந்த இந்த படப்பிடிப்பில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக நான் உள்பட 4 பேர் படத்தின் பாதியிலேயே வந்து விட்டோம்.

நாங்கள் அவருடன் சண்டை போட்டது எங்களுடைய அறியாமையினால் தான். ஒரு காட்சியை எப்படி இயக்க வேண்டும் .என ஒரு கலைஞர்கள் பல விதமாக யோசிப்பார்கள் என்பது அப்போது எனக்கு புரியவில்லை. அதே போலத்தான் கே.எஸ் ரவிகுமாருடன் வேலை பார்த்த கமல்ஹசனுக்கு அந்த இடத்தில் கற்பனை திறன் வேறு மாதிரி இருந்தது.

அப்படித்தான் ஒரு காட்சியில் கமல்ஹானும் பூர்ணம் விஷ்வநாதனும் நேப்பியர் பாலத்தில் பேசிக்கொள்ளும் ஒரு காட்சி காலையில் இடம் பெறுமாறு இருந்தது. அப்போது விடியக் காலையில் சூரியனும் வந்தது. உடனே கமல்ஹாசனுக்கு மழையில் வானவில்லில் ஒரு காட்சி எடுக்கலாம் என்ற எண்ணம் அவருக்கு தோன்ற ஒருவேளை நாங்கள் இயக்குனராக இருந்தால் அந்த எண்ணம் தோன்றி இருக்கலாம்.

இதற்கு பிறகு கமல்ஹாசன் காட்சிக்கு தயார் செய்து விட்டு திரும்பி பார்த்தால் கேமெரா மேனை காணவில்லை. கேமிரா மேன் கேமிராவை அண்ணா சமாதி பக்கம் இருக்கும் வேனில் வைத்துக்கொண்டார். கமல் கேமெரா எங்கே என கேட்க நாங்கள் வண்டிக்கு சென்று விட்டது என சொல்ல. கமல்ஹாசனுக்கு சரியான கோபம் வந்துவிட்டது, உடனே நாங்கள் கேமெராவை கொண்டுவர சொல்ல அவர் தரமாட்டேன் என்று கூறினார். பின்னர் எப்படியோ அடித்து புடித்து கேமராவை கொண்டுவந்தால் மழை நின்று விட்டது வானவில் காணாமல் போய் விட்டது.

இதனால் கடுமையான கோவமடைந்த கமல்ஹாசன் எங்களை திட்ட உடனே துணை இயக்குனர் கோவமடைந்து வேலை வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். இயக்குனரே சென்று விட்டார் இனிமேல் நாம் இங்கு இருந்தால் நமக்கு அசிங்கம் என எண்ணி என்னுடன் இருந்த 2 பேரும் அங்கிருந்து வந்து விட்டோம். ஆனால் இப்போதுதான் இயக்குநராகிய பிறகு தெரிகிறது துணை இயக்குனர்கள் படும் பாடு என்னவென்று, என்று கமல்ஹசனுடன் நடந்த கசப்பான சம்பவம் குறித்து அந்த பேட்டியில் நடிகர் மற்றும் இயக்குனரான சேரன் கூறியிருந்தார்.

Poorni

Recent Posts

போராடும் ‘விடாமுயற்சி’…இறுதி கட்டத்தை நோக்கி படத்தின் வசூல்.!

தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…

55 minutes ago

‘புஷ்பா’ ஒரு படமா…மாணவர்களின் நிலைமை கேள்விக்குறி…கொதித்தெழுந்த பள்ளி ஆசிரியர்.!

மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…

2 hours ago

பாகிஸ்.கேப்டன் செய்த பிரார்த்தனை…கிண்டல் அடித்த ரெய்னா..வைரலாகும் வீடியோ.!

பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…

2 hours ago

அரசியல் வசனங்களுடன் ஜனநாயகன்.. வெளியான மாஸ் அப்டேட்!

தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

3 hours ago

‘ஜெயலலிதா’ அம்மாவே சொல்லி இருக்காங்க..பிரபுதேவா நிகழ்ச்சியில் வடிவேல் பர பர பேச்சு.!

பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…

3 hours ago

தகுதியானவர்களின் மகளிர் உரிமைத் தொகையும் நிராகரிப்பு? கொந்தளிக்கும் பெண்கள்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…

4 hours ago

This website uses cookies.