90ஸ் காலகட்டத்தில் தமிழ் திரைப்படங்களின் வில்லன் நடிகராக பெரும் அளவில் பிரபலமானவர் நடிகர் “கபாலி” எனும் பொன்னம்பலம். இவர் மைக்கேல் மதன காமராஜன் என்ற படத்தில் நடிக்க துவங்கி செந்தூரப் பாண்டி, நாட்டாமை, கூலி, அருணாச்சலம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
மேலும், சண்டை பயிற்சியாளாகவும் இருந்துள்ளார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இந்நிலையில் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அதிர்ச்சி பேட்டி கொடுத்துள்ளார்.
அதாவது, என் அப்பாவுக்கு மொத்தம் நான்கு மனைவிகள், அதில் மூன்றாவது மனைவியின் மகன் என் சொந்த அண்ணன் என்னுடைய மேனேஜராக பணிபுரிந்தார். அவரை அண்ணன் என்ற முறையில் நான் பெரிதாக நம்பினேன்.
ஆனால், அவர் எனக்கு வில்லனாக இருந்துள்ளார். ஆம், எனக்கு உணவில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்து என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ள முயற்சித்துள்ளார். அதுமட்டும் அல்லாமல் என் வீட்டுப் பின்புறம் குழிதோண்டி அதில் என்னை வைத்து பில்லி சூனியம் செய்த என்னுடைய லுங்கி, என்னுடைய பொம்மை மற்றும் சில ஊமத்தை காய்கள் எல்லாம் போட்டு புதைத்துள்ளார்.
அதாவது, என்னை சாகடித்து குழி தோன்றி புதைப்பது போல உயிரோடு இருக்கும் போதே எனக்கு சூனியம் வைத்தார். அதனால் தான் நான் இப்போது கிட்னி கோளாறு காரணமாக சிகிச்சை எடுத்தேன். இதனை தொடர்ந்து உடல் நலம் தற்போது தேறி வருகிறேன்.
இதனிடையே, தனது சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பதாக நடிகர் பொன்னம்பலம் வீடியோ வெளியிட்டதை அடுத்து, ஏராளமான பிரபலங்கள் அவருக்கு உதவிக்கரம் நீட்டினர்.
தற்போது சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறியுள்ள நடிகர் பொன்னம்பலம், தனக்கு உதவியவர்கள் பற்றி பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார். அதில் சிரஞ்சீவி செய்த உதவி குறித்து மனம்திறந்து பேசியுள்ளார்.
கிட்டத்தட்டா 45 லட்சம் செலவு பண்ணினார் என்றும், ஏதோ ஒரு லட்சம் செலவு பண்ணுவார் என நினைத்து போன தனக்கு இவ்வளவு பெரிய உதவி செய்தது நெகிழ வைத்ததாக நடிகர் பொன்னம்பலம் தெரிவித்தார்.
மேலும், அதேபோல் தனுஷும் தன்னிடம் பேசிக் கொண்டிருந்தபோதே அக்கவுண்டில் பணம் அனுப்பி உதவினார் எனவும், அதேமாதிரி அர்ஜுன் சாரும் உடனே தனக்கு உதவினார். இவர்களெல்லாம் நான் எதிர்பார்க்காமல் உதவியவர்கள்.
அதேபோல் சரத்குமாரிடம் ஒருமுறை போன் செய்து கையில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என சொன்னேன். உடனே ஆபரேஷனுக்கு உதவினார். அவருடன் படத்தில் நடித்தபோது தங்கள் இருவருக்குள்ளும் சின்ன சின்ன மோதல்கள் இருந்த நிலையிலும் அவர் இன்று வரை எனக்கு உதவி செய்து வருகிறார் என தெரிவித்தார்.
அதேபோல் அஜித், விஜய், விக்ரம் ஆகியோர் தனது உடல்நலம் குறித்து ஒரு போன் பண்ணிகூட விசாரிக்கவே இல்லை என பொன்னம்பலம் வருத்தப்பட்டுள்ளார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.