சினிமா / TV

அமரன் படத்தால் நிம்மதி போச்சு.. ரூ.1.1 கோடி இழப்பீடு கேட்கும் கல்லூரி மாணவர்!

அமரன் படத்தில் இடம்பெற்றுள்ள தன்னுடைய மொபைல் எண்ணால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறியுள்ள மாணவர், நஷ்ட ஈடாக ரூ.1.1 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

சென்னை: கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று வெளியான திரைப்படம் அமரன். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் வெளியான இப்படம் 20 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது. இதுவரை 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், இப்படம் சிவகார்த்திகேயனின் திரை வாழ்வில் முக்கிய திருப்பமாக அமைந்து உள்ளது எனலாம்.

இந்த நிலையில், அமரன் படத்தில் இடம் பெற்று இருக்கும் மொபைல் எண் தன்னுடையது எனக் கூறி உள்ள சென்னை பொறியியல் கல்லூரி மாணவர் வாகீசன், இதனால் தனக்கு பல போன் கால்கள் (Phone Calls) மற்றும் மெசேஜ் வருவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும், “தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாட நினைத்தபோது எனக்கு போனில் அழைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. யார் யாரோ எனக்கு போன் செய்தனர். அப்போது, எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதன் பிறகு தான் எனக்கு தெரிய வந்தது, என் போன் நம்பர் அமரன் படத்தின் ஒரு காட்சியில் பயன்படுத்தப்பட்டது என்று.

ஆனால், தொடர்ந்து எனக்கு போன் கால்கள் மற்றும் மெசேஜ் வருவது நிற்கவே இல்லை. எனவே. போனை சுவிட்ச் ஆப் செய்தேன். அவசரமாக கால் செய்ய போனை ஆன் செய்தாலும், என்னால் ஒரு கால் கூட பண்ண முடியவில்லை. அந்த அளவிற்கு எனக்கு போன் கால்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

ஏராளமான ரசிகர்கள் தொடர்ந்து எனக்கு கால் செய்தும், மெசேஜ் செய்தும் உள்ளனர். இதனால் நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் கார்டு போன்ற விஷயங்களில் இந்த நம்பரைத் தான் நான் இணைத்து உள்ளேன். எனவே, என்னால் இந்த நம்பரை மாற்ற முடியாது” என தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: அடிமடியில் கை வைத்த வீட்டோட மாப்பிள்ளை : கைவரிசை காட்டியதால் கம்பி எண்ணும் மருமகன்!

மேலும், சமூக வலைத்தளம் மூலம் அமரன் குழுவினரை டேக் செய்து பார்த்தும் எந்தவித பதிலும் இல்லை எனக் குறிப்பிட்டு உள்ள வாகீசன், படத்தில் இருந்து தனது மொபைல் எண்ணை நீக்கும்படியும், தான் மன உளைச்சலுக்கு ஆளானதற்கு 1.1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டும் வாகீசன், வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

முன்னதாக, மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டு வெளியான அமரன் படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு, பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. அதிலும், நெல்லை திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

5 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

6 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

7 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

8 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

9 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

10 hours ago

This website uses cookies.