தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திற்கு பொறுத்தமானவர் நடிகர் பிரகாஷ் ராஜ். வில்லனாக நடித்து தமிழக மக்களிடையே தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்தில் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார். அந்தப் படத்தில் அசால்டாக நடித்து மக்களிடையே பாராட்டுக்களை பெற்றார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். நடிப்பில் கவனம் செலுத்தி கொண்டிருந்தாலும் இந்திய அரசியலில் நிகழும் நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகிறார். குறிப்பாக பாஜக-விற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
பிரதமர் மோடி மற்றும் பாஜக கட்சியை கடுமையாக விமர்சித்து வரும் பிரகாஷ்ராஜுக்கு பலர் எதிர்ப்பை கொடுத்து வந்த நிலையில், சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் தனியார் கல்லூரிக்கு பிரகாஷ்ராஜ் சென்று இருக்கிறார்.
தியேட்டர் வசனம், சமூகம் சார்ந்த உரையாடல், சினிமா போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பிரகாஷ்ராஜ் சென்றதை அறிந்த மாணவர்கள் கல்லூரிக்கு சம்பந்தமே இல்லாத தனியார் நிகழ்ச்சி எப்படி கல்லூரி வளாகத்திற்கு நடத்தலாம் என்று கேள்வி எழுப்பியும், பிரகாஷ்ராஜ் வரக்கூடாது என்று கூறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாணவர்களை சமாதானப்படுத்தியும், மாணவர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டம் செய்து வந்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பின்னர், பிரகாஷ்ராஜை கல்லூரிக்கு வரவழைத்து சிறப்புரையாற்றிய பின்னர் புறப்பட்டு சென்றார்.
பிரகாஷ்ராஜ் சென்றதும் மாணவர்களில் சிலர் கோமியத்தை எடுத்து பிரகாஷ்ராஜ் சென்ற இடத்தை சுத்தம் செய்து அசிங்கப்படுத்தினர். மாணவர்களுடன் வேறு சிலரும் கலந்து போராட்டம் நடத்தியதாகவும் அவர்களின் அடையாளம் கண்டறியவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்த வீடியோ தற்போது இணையதளத்தில் வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.