“17 வயசுல 120 ரூபாயுடன் ஹீரோ ஆகனும்னு சென்னை வந்தேன்” வடிவேலுவுடன் நடித்த காமெடி நடிகரின் சோக நிலை..!

தமிழ் சினிமாவில் பல்வேறு காமெடி நடிகர்கள் ரசிகர்களின் மனதில் நீங்காதது இருந்து வருகின்றனர். அந்த வகையில், வைகை புயல் வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் துணை காமெடி நடிகராக நடித்து ரசிகர்களை ஈர்த்தவர் நடிகர் விஜய் கணேஷ். சமீபத்தில் பிரபல சேனலுக்கு இவர் பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் தன்னுடைய திரை வாழ்கை குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பேசியிருந்தார்.

அப்போது அவர் பேசியதாவதுது, “17 வயதில் சென்னை வந்தேன். எனது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி. எனக்கு சிறு வயத்திலிருந்தே சினிமாவின் மீது அதிகமாக ஆசை இருந்தது. அதன் காரணமாக நன்பர்களின் தூண்டுதலின் பேரில் என்னுடைய 17 வயதில் 120 ரூபாயுடன் சென்னைக்கு வந்தேன். சென்னை வந்ததும் எனக்கு அவ்வளவு இன்பம். அதன்பிறகு, அவ்வளவு ஓடி அலைந்தும் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. கையில் இருந்த பணம் எல்லாம் முடிந்து விட்டது.

நான் என்ன செய்வதென்று கேகே நகர் பேருந்து நிலையம் அருகே இருந்த ஒரு கடையில், ஒரு அம்மாவிடம் சென்று வேலை ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். என்னை மேலும் கீழும் பார்த்ததும் திருடன் போல தெரிந்தது போல. பிளாட் பாரத்தில்தான் தூங்கினேன். அவர் உடனே என்னை சாப்பிட்டு விட்டீர்களா என்று கேட்டு 2 பரோட்டா சாப்பிட கொடுத்தார். நான் அழுதுகொண்டே சாப்பிட என்னுடைய நிலைமை புரிந்து உன்னுடைய பொருட்களை எடுத்து கொண்டு வா எனக் கூறினார்.

நானும் வேகமாக சென்று பேட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு வந்த போது எனக்கு வேலை கொடுத்தார். பின்னர் நான் எங்கே தங்குவது என்று கேட்க இங்கே தான் என்று கூற பிளாட் பாரத்தில் தான் என்னுடைய சென்னை வாழ்கை ஆரம்பித்தது. பின்னர் பல முயற்சிக்கு பிறகு சினிமாவில் அடியால், வில்லன் என சிறிய சிறிய வேடங்கள் கிடைத்தது. அப்போதெல்லாம் நடிப்பதற்கு 200, 300 ருபாய் தான் கொடுப்பார்கள்.

அதற்கு பிறகு ஒய். ஜி. மகேந்திரன் சீரியலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அந்த சீரியலில் காமெடி கதாபாத்திரத்தில் ஒருவர் தேவை பட்டார். அப்போது ஒய். ஜி. மகேந்திரன் என்னை அழைத்து மீசையை எடுக்கச் சொன்னார். நான் பயந்து இந்த மீசையின் மூலம்தான் வில்லனாக நடிக்கவே வைக்கிறார்கள் இதை எப்படி எடுப்பது எனக் கூற பின்னர் மீசை எடுத்து வந்து அந்த காட்சியில் நடித்தேன் அனைவரும் பாராட்டினார்கள். பின்னர் நடிகர் விவேக்குடன் சில காலங்கள் நடித்தேன். அப்போது வடிவேலுக்கும் விவேக்கிற்கும் பெரிய போட்டி இருந்தது.

ஒரு நாள் பிலிம் சிட்டியில், செல்வ சேகரன் இயக்கத்தில் “புத்தம் புது பூவே” என்ற படம் எடுத்தாரகள். அங்கு வடிவேலு இருக்கிறார் என்று போண்டா மணி தகவல் கொடுத்தார். அங்கு செல்ல சோடாவை வைத்து போதை போட்டு இருப்பவர்களை எழுப்பும் காட்சியில் எனக்கு வாய்ப்பு கிடைத்து. அதில் நடிக்க நடிகர் வடிவேலுவுக்கு என்னை மிகவும் பிடித்து போய் விட்டது. அந்த படம் தான் நான் நடிகர் வடிவேலுவுடன் நடித்த முதல் படம்” என்று பல விஷயங்களை நடிகர் விஜய் கணேஷ் பகிர்ந்து கொண்டார்.

Poorni

Recent Posts

தமிழ் மட்டுமே உயிர் மூச்சு… காமராஜரின் தொண்டன் : கடைசி வரை கட்சி மாறாத குமரி அனந்தன்!

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமான காலமானார். அவருக்கு வயது 93. நேற்று இரவு 12.30…

52 minutes ago

நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம்.. வெடிகுண்டை வீசிய மர்மநபர்கள் யார்?

நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம் உருவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் காலியா முன்னாள் எம்எல்ஏவாக…

1 hour ago

படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!

படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…

14 hours ago

நீட் தேர்வுக்கான அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு நாடகம்.. இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…

14 hours ago

அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!

பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…

15 hours ago

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

17 hours ago

This website uses cookies.