தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில்க்கு அடுத்தபடியாக காமெடி நடிகராக மிக பிரபலமாக திகழ்ந்து வந்தவர் நடிகர் வடிவேலு. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். சில வருடங்களுக்கு முன், எதிர்பாராத விதமாக, சில காரணங்களுக்காக, சினிமாவில் நடிக்க தடை விதித்து இவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.
பின்னர், தடையை நீக்கியதற்கு பின், 4 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து, படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில், இவர் கதாநாயகனாக நடித்து வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகி சுமாரான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தின் தோல்விக்கு காரணம் வடிவேலுவுடன் சேர்ந்த இந்த கால காமெடி நடிகர்கள் தான் என்று பலர் விமர்சித்தனர்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன், சிங்கமுத்து, முத்துக்காளை உள்ளிட்ட பல நடிகர்கள் வடிவேலு காம்போவில் அவருக்காகவே நடித்து கொடுத்தனர். தற்போது அவர்களை ஒதுக்கி அவமானப்படுத்திவிட்டு தற்போது சின்ன நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தது தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸின் தோல்விக்கு காரணம் என்று முத்துக்காளை சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
நாங்கள் எல்லோரும் வடிவேலுவுக்காக நடித்தோம். ஆனால் இப்போது அவருடன் நடிக்கும் நடிகர்கள் தாம் வளரவேண்டும் என்று நினைத்து வருகிறார்கள். வடிவேலுவாக இருந்தாலும் பிடிக்கவில்லை என்றால் தூக்கி எறியக்கூடிய மனநிலையில் மக்கள் இருக்கின்றனர் என்று முத்துக்காளை காட்டமாக தெரிவித்துள்ளார்.
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
This website uses cookies.